சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

(“சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பல தசாப்த எதிரி நாடான கியூபாவின் கொம்மியுனிஸ தலைவருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 1959 கியூப புரட்சிக்குப் பின்னர் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு விஜயம் செய்வது இது முதல் முறையாக அமைந்தது. இரு நாடுகளும் முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளாகும்.

(“கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

பிரபல மக்கள் தொடர்பாளரும், தமிழ் சினிமாவின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 அவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், 1928ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயர் பெயர் மணி. பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுவே அவரது கலை ஆர்வத்திற்கு வித்தாக அமைந்தது.

(“பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(“பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்கள் வரலாற்றின் புதல்வர்கள்!- பொன்காந்தன்
2009ம் ஆண்டு கொடூரமான இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் வரை பயணித்த அனைத்து தமிழ் மக்களும் வரலாற்றின் புதல்வர்கள் என கவிஞர் பொன்கந்தன் குறிப்பிட்டுள்ளார்.

(“வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.” தொடர்ந்து வாசிக்க…)

தெறி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததா? ஒரு பார்வை

தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகியுள்ளது. விஜய்-அட்லீ முதன் முறையாக இணையும் படம் என்பதை தாண்டி ஜி.வி.பிரகாஷிற்கு இது 50வது படமும் கூட. இதனாலேயே இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.

(“தெறி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததா? ஒரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

சொத்துக்குவிப்பு வழக்கும்… பன்னீரின் செழிப்பும்! ( பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை- பாகம் 2 )

பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி எப்பொழுதும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அதனால் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை கட்சிக்கு கொண்டு வந்து 1999 ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்தார் சசிகலா. முதலில் தினகரனை எதிர்த்து திமுக சார்பில் கம்பம் செல்வேந்திரன் போட்டியிட்டார். அப்போது பன்னீர் பெரியகுளம் நகராட்சி சேர்மன். அவர் செல்வேந்திரனின் மூலம் கட்சிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்று பயந்த சசிகலா முதலில் தேர்தல் வேலைகளை பன்னீருக்கு கொடுக்க தயங்கினார்.

(“சொத்துக்குவிப்பு வழக்கும்… பன்னீரின் செழிப்பும்! ( பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை- பாகம் 2 )” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 5)

1956 ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் அரசு பதவி ஏற்றது.அரசு நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்டன. தாய் மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் எங்களைத் போன்ற ஏழைக்குடும்பங்கள் வாழ்வுக்கு நம்பிக்கை வளர்ந்தது. இதே பண்டாரநாயக்கா எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபையின் கோரிக்கையை ஏற்று பல சட்டங்கள் இயற்றினார். ஆலயங்கள்,பொது இடங்களில் தீண்டாமை தடை செய்யப்பட்டது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு பாடசாலைகள் கட்டிக் கொடுக்கவும் வேலை வாய்ப்புகள் வழங்கவும் உறுதியளித்தார். ஆனால் பண்டாரநாக்கா வைத்த கோரிக்கை ஒன்றை செயற்படுத்த எம்.சி.சுப்பிரமணியம் தயங்கிவிட்டார்.

(“பற்குணம் (பதிவு 5)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!

ஈழ தமிழர் உரிமை போராட்ட வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத முதல் பெண் அரசியல் போராளி ஞாயிறு [20-03-2016} தன் சொந்த மண்ணை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தீயில் சங்கமமானார். திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் இன்று எம்மிடையே இல்லை. விழியோரம் நீர் கசிய அந்த அன்னைக்கு, அக்காவுக்கு, தங்கைக்கு, தோழிக்கு விடைகொடுக்க கூடியிருந்த அனைவரும் அவர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் கடைசிவரை அவரின் கேள்விக்கு எவராலும் பதில் கூற முடியவில்லை. தன்னை சந்திக்கும் எவரிடமும் அண்ணன் அமிர் பற்றி பேசும் போது அவரின் கேள்வி, ஏன் அவரை சுட்டவங்கள்? என்பதே. இறுதிவரை எம் இன உரிமைக்கு குரல் கொடுத்தவரை ஏன் சுட்டவங்கள் என்ற அந்த கேள்வி என்னை கடந்த காலத்துக்கு அழைத்து செல்கிறது.

(“ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமைகளுக்காய் அணித்திரள வேண்டும்

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

 

ஆசிரிய உதவியாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதும் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்கள் அணித்திரள வேண்டும் என மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு எஸ்.மோஹன் அச் சங்கம் 12.03.2016 அன்று கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். சுமார் 250ற்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும் மாணவர்களின் கல்வி உரிமையையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனினும் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை சட்டரீதியாக பெற்றக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

(“ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமைகளுக்காய் அணித்திரள வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)