தோழர் றொபேட் (சுபத்திரன்)

ஞாபகார்த்த நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் 24.12.2018 அன்று கண்டி வீதி, நுணாவில், சாவகச்சேரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சுகு ,மத்திய குழு உறுப்பினர் தோழர் சாந்தன் மற்றும் தோழர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தோழர், அய்யா நல்லகண்ணு

(தோழர்.சி.மகேந்திரன்)
தோழர், அய்யா நல்லகண்ணு அவர்கள் 94 வயதில் அடியெடுத்து வைக்கிறார் டிசம்பர் 26ல். சென்ற நூற்றாண்டில் முக்கால் பகுதியை நிறைவு செய்து, இந்த நூற்றாண்டின் முன் பகுதியையும் விரைந்து, கடந்து, வந்திருக்கிறார். காந்தியடிகளை நேரில் பார்த்தவர்கள்,
இந்திய சுதந்திர போராட்ட எழுச்சியை கண்ணால் கண்டவர்கள், இந்தியா ஒரு சமத்துவ நாடாக மாறவேண்டும் என்பதற்காக போராடி கொடிய சித்திரவதையை சந்தித்து, ஆயுள் தண்டனை பெற்று, 9ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விடுதலைப் பெற்றவர் யாராவது உண்டென்றால் அது தோழர் ஒருவராக தான் இருக்க முடியும். (“தோழர், அய்யா நல்லகண்ணு” தொடர்ந்து வாசிக்க…)

கீரை

(கருணாகரன்)

“சங்கர் மாரடைப்பினால் இறந்து விட்டார்” என்று காலையில் ஒரு நண்பர் . குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இப்போதுதானே 2.0 என்று ரஜினிகாந் நடித்த புதிய படத்தை வெளியிட்டார் சங்கர். அதற்குள் என்ன இப்படியொரு அவசரம்? என்று நீங்கள் யோசிக்கலாம். நான் கூட அப்படித்தான் எண்ணினேன். இறந்தது சினமா நெறியாளர் சங்கரல்ல. கிளிநொச்சியில் தனியார் நிறுவனமொன்றை இயக்கி வந்த சங்கரே. (“கீரை” தொடர்ந்து வாசிக்க…)

ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை மனிதநேய மக்கள் கட்சி வழிமொழிகிறது. மு.க. ஸ்டாலின் தெளிவான ஒரு பார்வையுடன் இந்த முன்மொழிவைச் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வேகமாகப் பாயத் தொடங்கியுள்ளது என்பதையே காட்டுகின்றன. (“ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.

பத்திரிகையாளர்கள் பேசவேண்டிய விடயத்தை ஒரு அரசியல்வாதி பேசியிருப்பது மெச்சத்தக்க நிகழ்வு. எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம் எனினும் இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனிவேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பாலசிங்கம்தான். (“சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளமும் வான் பாய்தலும்

(Saakaran)

நேற்றைய தினம் வன்னி என்று பலராலும் அழைக்கப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் பெய்து முடித்த மழை மாங்குளத்தில் அதி உச்சமாக பெய்து சாதனைகளுடன் வேதனைகளையும் 2009 யுத்தத்தில் இருந்து மீண்டுவரும் மக்களை ஆழத்தியுள்ளது. அனைத்து குளங்களும் குளங்களின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் தமது அணைக்கட்டிற்கு மேலாக வெள்ளம் கரைபுரண்டோடி மக்கள் குடியிருப்புகள், வயல்கள், கால்நடைகள், வீதிகள் என யாவற்றையும் வெள்ளத்திற்குள் ஆழ்த்தியுள்ளது…. அழித்துள்ளது.

(“மழை வெள்ளமும் வான் பாய்தலும்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் கடன் நிதி உதவியில் 34அடியாக இருந்த குளத்தை 36அடியாக உயர்த்தி உயர்தர தொழிநுட்பத்தில் பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தரப்பட்டுள்ள குளத்தை துறைசார் நிபுணத்துவம் மிக்க பொறியியலாளர்கள் கண்காணித்தும் பராமரித்தும் வருகிறார்கள். (“இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றொபேட்டின் 61 ஆவது பிறந்தநாள் நினைவாக

அமரர் தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களின் 61 ஆவது பிறந்த நாள் இன்றாகும் (24.12.2018) தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர். 1998 இலிருந்து 2003 வரை யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

எங்கள் சர்வேஸ்வரி அம்மாவுக்கு அஞ்சலி -தோழர் சிறிதரன்

1980 களின் நடுப்பகுதியில் மறைந்த தோழர் அகிலனின் தாயார் சர்வேஸ்வரி பரமசாமி(86) மறைவு. 1983 இன வன்முறையின் போது இவரது கணவர் பரமசாமியும் மூத்த புதல்வரும் தெகிவளையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவரது இளைய மகன் தோழர் அகிலன் ஈழமாணவர் பொதுமன்றத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
1980 களின் நடுப்பகுதியில் வங்ககடலில் படகு விபத்தில் தோழர்களுடன் உயிர் நீத்தார். 1983 இன் பின்னர் அவர்கள் பேரிழப்பின் துயரத்துடன் சர்வேஸ்வரி அம்மா அகிலன் வாசுகி யாழ்ப்பாணம் உரும்பிராய் விட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் உரும்பிராய் வீடும் 1983 இற்கு பின்னான இருண்ட காலத்தில் சமூக விடுதலை இயக்கத்தை ஆதரித்த இடமாக இருந்தது. சர்வேஸ்வரி 1983 இல் இருந்து 35 ஆண்டுகள் சர்வேஸ்வரி பரமசாமி அம்மாவின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுடனான பயணம் . அது ஒரு அவல சரித்திரம்.
அம்மாவிற்கு எமது அஞ்சலிகள்!தோழர்கள் வாசுகி ஆதவன் பிள்ளைகளுடன் துயர் பகிர்கிறோம்.

Mrs Sarveswary Paramasamy passed away

தோழர் செண்பகத்தின் அம்மா

Vasuki’s (Vasuki Aathavan) Mom Mrs Sarveswary Paramasamy passed away peacefully at home yesterday evening (December 21, 2018)

VISITATION :
Tuesday, December 25, 2018
From 5:00 pm to 9:00 pm

Wednesday ,December 26,2018 From 8:00 am to 9:30 am

At Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON L3R 5G1

SERVICE :

Wednesday,December 26,2018
From 9:30 am to 11:30 am

At Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

CREMATION & WITNESSING

Wednesday, December 26, 2018
@ 12:00 Noon to 12:30 pm
At :Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON L0H 1G0