ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடங்களில்

(Sutharsan Saravanamuthu)

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த பொது மக்களுக்கும் , போராளிகளுக்கும் மற்றும் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து மரணித்த அனைத்து போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள்.

எங்களுக்கு இல்லை முடக்கம்

(மகேஸ்வரி விஜயனந்தன்)

பெண் என்பவள் சாதாரணமானவள், இரக்கக்குணம் கொண்டவள், அன்புக்குப் பத்திரமானவள், எளிதில் வசியப்படுபவள், இலகுவில் ஏமாறுபவள் என்பதற்கும் அப்பால் முழு தேசத்தையும் கட்டியமைக்கும் வல்லமை பெண்ணுக்கு உள்ளதென்பது முற்காலம் தொடக்கம் இக்காலம் வரை நிரூபணமாகியுள்ளது.

குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள்

(ப.பிறின்சியா டிக்சி)

பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன.

சுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா? மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய இரகசிய ஆலோசனையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்வி கைது ..சித்திரவதை .. கொலை . அவர் செய்த குற்றம் .. மனித நேயம்! புலிகளின் மற்றொரு கொடுரம்!

(கலாநிதி)

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது.

சுமந்திரன் – மஹிந்தா இன்று தனியாக சந்திப்பு

சுமந்திரன் – மஹிந்தா இன்று தனியாக சந்தித்து ஒருமணி நேரம் பேச்சு. ஏனைய தமிழரசு கட்சியினரும் மற்றும் சித்தார்த்தன் செல்வமும் இந்த சந்திப்பில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது ஏற்கனவே ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் பற்றி தெரிவித்த கருத்துக்களை பிரதமர் சுமந்திரனுக்கு விளக்கினார். மேலும் புதிய அரசியல் யாப்பு மாற்றம் ஒன்று 2025 வரையில் உருவாக்குவதற்கு பொறுப்பான அமைச்சு பதவி பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சந்திப்பில் பொது தேர்தல் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை எனவும் இது தேர்தல் தொடர்பான மஹிந்தா கட்சியினரது நிலைப்பாட்டினை சுமந்திரன் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதை காட்டுகின்றது எனவும் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எங்க அப்பன் எங்க?.

எரித்துக் கொல்லப் பட்ட ஏழைச்சாதிச் சிறுமி ஜெயஸ்ரீ, நினைவிழக்கும் முன் கூறிய இறுதி வார்த்தைகள் என் அப்பன் எங்கே என்ற வார்த்தைகள்.

தோழர் மிச்சேல் லூக்காஸ் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலி!

(Maniam Shanmugam)

சோவியத் மக்களுக்கான கனடிய நண்பர்கள் சங்கத்தினதும் (இவ்வமைப்பு சோவியத் புரட்சிக்கு அடுத்த ஆண்டு 1918 இல் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது), சோவியத் மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச சங்கத்தினதும் நீண்டகால தலைவரும், அந்தச் சங்கத்தின் மாத வெளியீடான North Star Compass சஞ்சிகையின் (இது பல மொழிகளில் வெளியிடப்பட்டது) ஆசிரியரும், கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் அங்கம் வகித்தவருமான தோழர் மிச்சேல் லூகாஸ் (Michael Lucas) அவர்கள் தமது 94 ஆவது (1926 – 2020) வயதில் மே 04 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தி எங்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.