“வாய்மையே வெல்லும்” தமிழகத்தில் சொல்லாகவும். கேரளத்தில் செயலாகவும் இருக்கிறது

“வாய்மை வெல்லும்”, இது தமிழக அரசின் இலச்சினையில் உள்ள சொற்றொடர். பேரிடர் மேலாண்மையில் இந்த சொற்றொடர்தான் உலகே சொல்லும் முதல் மந்திரம். ‘உள்ளது உள்ளபடி’ சொல்லி, “மக்கள் முதல்- மற்றவையெல்லாம் பின்னர்” என இயங்கும் அரசுகளே பேரிடரை வெற்றி கொள்கின்றன. தைவானும் கொரியாவும் ஜப்பானும் அப்படித்தான் மீண்டெழுந்துள்ளன. அப்படி நம் கண் முன்னே வெற்றி பெற்ற நம் தேசத்து மாநிலம் கேரளம். அங்கே புதிய நோயாளிகள் வருவது முழுமையாக கட்டுப்பட்டுள்ளது. மரணங்கள் இப்போது இல்லை. கூட்டு சிகிச்சையில் முதல் நிலை, என கேரளம் மருத்துவத்தில் மட்டுமல்ல, மக்களின் பசி ஆற்றியதில், மனச் சோர்வு நீக்கியதில் இந்தியாவிற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டாக நிற்கின்றது.

விமான போக்குவரத்து நாளை ஆரம்பம்

நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, உலகில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் கீழ், லண்டன், டோக்கியோ, மெல்பேன், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்

(சட்டத்தரணி என்.கே. அஷோக்பரன்)

2018ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தன்னிச்சையான முறையிலும் அரசமைப்புக்கு விரோதமாகவும் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது, அதற்கெதிராக எழுந்த வலுவான குரலாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் குரல் இருந்தது.

அம்மாக்கள் தினம்……!

(சாகரன்)
நுகர்வோரை மையப்படுத்தி புதிய உலக ஒழுங்கு முறைக்குள் இன்று விசேட தினங்களும், கொண்டாட்டங்களும் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் அவற்றில் எனக்கு அதிகம் நாட்டம், உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த தினங்களை சார்ந்த உறவுகள், பாசங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்களில் எனக்கு நிறையவே ஈடுபாடு உண்டு.

கொரோனா: லேட்டஸ்ட் செய்தி

இத்தாலிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்களுக்கு நன்றி. கோவிட்-19 நிமோனியா அல்ல. ஆனால் இரத்த நாளங்களில் பரவலான இரத்த உறைதல் அதிக அளவில் இருந்தது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது (Disseminated Intra vascular Coagulation).

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: சீன நிறுவனம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாகவும், இத்தாலி தரப்பில், தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாகவும் கூறியுள்ளன.

நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது.

கட்டுப்பாடு தளர்வால் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது. 2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.