தோழர் . முகுந்தன்

(Sugan Paris)

(ஆறுமுகம் முருகநேசன் ,பேராதனைப் பல்கலைக்கழக விவசாயபீட விரிவுரையாளர்)

மாகாணசபை நெருக்கடிக்குள்ளானபோது அதன் முன்னணி செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேறுவழியின்றிப் பின்வாங்கவேண்டியிருந்தது. கடல் வழியேயும் விமானப் பயணமாகவும் சென்ற அந்த இறுதி நாட்களில் முகுந்தனுக்கு விமானவழி பரிந்துரைக்கப்பட்டும் அதை மறுத்து கடைசித் தோழர்களையும் கடல்வழியே அனுப்பிவைக்கும் ஏற்பாட்டில் தானும் அவர்களுடன் கடைசியாளாகப் படகேற முயன்றபோது
அத் தொகுதியை முழுதும் புலிகள் கைதுசெய்தனர். அதில் முகுந்தன் இருப்பது கைது செய்தவர்களுக்குத் தெரியாது.

நோர்வேயில் ஜோர்ஜ் புளொயிட் இன் மரணத்திற்கு எதிரான போராட்டம்

(Thiagarajah Wijayendran)
ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற பெயருள்ள ஓர் அவ்ரோ அமெரிக்கர் வீதியில் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமான சம்பவம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று அவரை நினைவுகூர்ந்து ஒஸ்லோவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஐம்பது பேருடன் மட்டுமே நடக்கலாம் எனக் (கொரோனா தொற்றைத் தவிர்க்க) காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். வந்து கலந்துகொண்டோர் எண்ணிக்கை 14000வரை எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். எத்தனைபேர் வந்தாலும் அதில் நாம் தலையிட மாட்டோம் எனக் காவல்துறையினர் முன்கூட்டியே கூறியிருந்தனர். இத்தருணத்தில் சட்டம் ஒழுங்குதான் எமக்கு முக்கியம் - நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு அல்ல என விளக்கம் கூறப்பட்டிருந்தது.

மினிஆப்போலஸ்யை புரிந்துகொள்ளும் நாம், நிச்சாமத்தை புரிந்துகொள்ளத் தயாரில்லை!

(Thesam Net)
ஜனநாயகத்தின் காவலன், மனித உரிமைகளின் காவலன் என்ற வேசம் கலைக்கப்பட்டு நிர்வாணமாக நிற்கின்றது, அமெரிக்கா என்ற முன்னாள் வல்லரசு. அதேபோன்று தமிழ் சூழலில் இந்த நிறவாதத்திறகுச் சற்றிலும் குறையாத சாதிவாதம் பிரதேச வாதம் மதவாதம் இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. ஒடுக்கும் சாதியினரான கணிசமான பிரிவினர் முழுப் பூசணிக்காயை சோற்றினுள் மறைக்க முயன்றாலும் இவையெல்லாம் ஆங்காங்கே தலைக்காட்டியே வருகின்றது. பிரித்தானியாவில் உள்ள இனவாதம் போன்று வடக்கில் உள்ள சாதிவாதம் பிரதேசவாதம் மதவாதம் அனைத்தும் அங்குள்ள கட்டமைப்புகளினால் உள்வாங்கப்பட்டு அதுவே நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது.

அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன.

யாழ் பல்கலை துணைவேந்தர் நியமனம்

யாழ் பல்கலை துணைவேந்தர் நியமன பட்டியலை தயாரிக்கும் குழுவில் உள்ள கி. விசாகரூபன் – ஒரு காமுகர் என குற்றம்சாட்டப்பட்டவர்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தேர்வுக்குழு மீண்டும் வடக்கின் கல்வியை காமுகர்களின் கையில் ஒப்படைக்கப் போகின்றதா?

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் – மாளவிகா மோகனன்

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் என்று ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன.

யாழ் நூலக எரிப்பு: பாசிசத்தின் இன்னொரு வடிவம்!

(Maniam Shanmugam)

1981 மே 31 – யூன் 01 இடைப்பட்ட நள்ளிரவு அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன – ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களாலும், பொலிசாராலும் யாழ்ப்பாண நகரம் மயான பூமியாக மாற்றப்பட்டது.

1981 யூன் யாழ்ப்பாணச் சம்பவங்கள் வெளியுலகிற்குப் போன விதம்!

(Maniam Shanmugam)

1981 யூன் மாதம் 04ஆம் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்ற வேளையில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களும், பொலிசாரும் இணைந்து யாழ்ப்பாண நகரில் நடத்திய வெறியாட்டத்தின் போது நடைபெற்ற, இதுவரை வெளிவராத ஒரு விடயம் பற்றிய தகவல் இது.

இனவெறித் ’தீ’

(என்.கே. அஷோக்பரன்)

அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார்.