எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்

இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யா, செவ்வாய்க்கிழமை (27), தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதுடன், எல்லையோர உக்ரைன் கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிணி போக்கிட விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து வறுமை மற்றும் பசி ஒழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், 2024ஆம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியன் மக்கள் கடுமையான அளவிலான பசியை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.7 மில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது, ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய பசியில் புதிய உச்சத்தை அறிவித்துள்ளது.

“மாதவிடாய் களங்கத்தால் பல பெண்கள் அமைதியாக அவதி” – பிரதமர் ஹரிணி

மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“பின்வாங்க மாட்டேன்” – அனுரகுமார திசாநாயக்க

“சமூக முன்னேற்றத்தை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்குவது இல்லை” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது  எக்ஸ் வலைத்தளப் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதித் தொழில் துறை தொடர்பான கலந்துரையாடல்

ஏற்றுமதித் தொழில் துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (28) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அறுகம்பே பிகினி விவகாரம்;அமைச்சர் சந்தேகம்

அறுகம்பே  விரிகுடா சுற்றுலாப் பகுதியில் பிகினிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் தவறான செய்தி குறித்து அவசரமாக விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் , நிசாம் காரியப்பருக்கு கஜேந்திரகுமார் நன்றி

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற வைப்பதற்காக தமிழ் தரப்புடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை செய்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கூறியுள்ளார்.

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர்

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு புதன்கிழமை (28) தெரிவித்தார்.  

AI வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

AI தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.