வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

50 அல்லது 60 மாணவர்களைக் கொண்ட நெரிசலான வகுப்பறைகளில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை என்பதால், ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25 முதல் 30 வரை குறைக்க கல்வி அமைச்சகம் இலக்கு வைத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார்.

’109’ ஐ ஊக்குவிக்கும் ஊர்வலம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் முறைப்பாடு செய்வதற்கான 109 அவசர அழைப்பை ஊக்குவிப்பதற்காக, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை (19) ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது.

ரோஹித எம்.பியின் மகள் மாயம்

பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட ஜீப் தொடர்பான விசாரணை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்ய களுத்துறையில் உள்ள நுககொட வீட்டிற்குச் சென்ற போதிலும், சந்தேக நபரும் அவரது கணவரும் வீட்டில் இல்லை என்று பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு   தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற முறையில் ரயில்வே கேட்டை கடந்த பேருந்து

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில், நாவலப்பிட்டி வரகாவ ரயில் கேட் மூடப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்தை ஒரு சிறிய இடத்தின் வழியாக பொறுப்பற்ற முறையில் செலுத்திய குற்றச்சாட்டில், தனியார் பேருந்து சாரதி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர்: பருத்தித்துறை வீதியை திறக்கும் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் பெருந் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு பின்புறம் உள்ள பருத்தித்துறை வீதி மூடப்பட்டுள்ளதால் சன நெரிசல் ஏற்படுவதாக கடந்த மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மட்டு நகரில் ஐஸூடன் இளைஞனான வியாபாரி கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதைப் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன்   சனிக்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த முன்னேற்றம் சரியானது

வம்சம் அழிந்துபோகும் என்று வருத்தப்படுகிறார் ஒருவர். வரலாறு தெரியாதுபோகும் என்று வருந்துகிறார் ஒருவர்.பண்பாடு என்னாவது என்று பதறுகிறார் ஒருவர். பாரம்பரியம் பொன்னானது என்று பாடுகிறார் ஒருவர். ஆண்களின் அடையாளம் அழிந்துபோகும் என்று அலறுகிறார் ஒருவர். பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாததால், வாழ்வே கேள்விக்குறியான பிள்ளைகளைப் பற்றி அறியார் எவரும். பெண் உரிமை என்று வாய்கிழியப் பேசுவோரும் வம்சமென்று வந்துவிட்டால், வாய் மூடி மௌனம் காப்பர். இன்றைய சமூக, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ற மாற்றம் வரவேற்புக்குரியது.