நாட்டில் “குற்ற அலை” இல்லை.

சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நேற்று (11) தெரிவித்தார். கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல் கும்பல்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததாக அவர் கூறினார்.  ஊவா மாகாண குற்றவிசாரணை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது,  பதில் பொலிஸ் மா அதிபர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…!

இராணுவ முகாமிற்கு வருமாறு  கூறிவிட்டு தாக்குதல் நடாத்தியதில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவினரால்  அறிக்கை ஒன்று இன்றையதினம் (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டு சம்பவம் – 5 இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளார். காணாமல் போனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் , ஊரவர்களும் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்தியா: நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் அறிமுகம்

புதுடெல்லியில் நாட்​டின் நீள​மான சரக்கு ரயிலை மத்​திய ரயில்வே அமைச்​சகம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த ரயி​லானது 354 வேகன்​களு​டன் 4.5 கிலோ மீட்​டர் நீளம் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை பெற்​றுள்ள இதற்கு ருத்​ராஸ்த்ரா என்று பெயர் சூட்​டி​யுள்​ளனர்.

கொழும்பின் ஆபத்தான் பகுதிகள் கண்டுபிடிப்பு

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இல்மனைட் அகழ்வு: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார்

வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு நடவடிக்கையை வலான ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று (09) சுற்றி வளைத்தது.

இன்று முதல் Online நுழைவுச்சீட்டு விநியோகம்

கவுடுல்ல தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நுழைவுச் சீட்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முதல் Online ஊடாக  பெற்றுக்கொள்ள முடியுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 07 பேருடன் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், சனிக்கிழமை (09) அன்று  பிற்பகல் மன்னாருக்குவடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு கொன்றையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 

சமஸ்டியை வலியுறுத்தி மக்கள் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (10) அன்று திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது.  பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்றைய தினம் கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர். இதில் பெருமாபாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இளைஞர் கழங்கள்;ஜே.வி.பியின் பணயக்கைதி

நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் பகடைக்காயாக மாற்றப்பட்டு, ஜே.வி.பி.யின் அரசியல் பிடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.