இணையவழி கடன் : பல உயிர்களைப் பலி

அத்தனக்கல்ல  பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (13) அன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ; ‘ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ளன’

41ஆவது வயதில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாதனை ரீதியிலான தனது ஆறாவது உலகக் கிண்ணமே தனது கடைசி என கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

ஈகுவடார் சிறையில் கைதிகள் மோதல் – 31 பேர் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கூடாரமாக செயல்படுகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அடிக்கடி தொழில்போட்டியால் மோதல்களும் ஏற்படுகின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட உழைப்பு இயந்திரம்

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களைப் போல சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட வேறு எந்த தொழிலாள வர்க்கமும் இல்லை. இதற்குக் காரணம், தோட்டத் தொழிலாளி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்த நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருள். சில சமயங்களில் இது இறக்குமதி செய்யப்பட்ட உழைப்பு இயந்திரம் என்றும் கூறலாம்.

NPP எம்.பி பொலிஸில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். 

கண்களைக் கட்டிக் கொண்டு கொழும்பு மேயர் நடைப்பயணம்

கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு குழுவுடன் இணைந்தார்.

போதைப்பொருளுடன் ஆறு வாகனங்கள் பறிமுதல்

கிரிந்த , நிதன்கலை பகுதியில் ​மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட 350 கிலோ கிராம் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டு, ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடல் வழியாக போதைப் பொருள் கொண்டு வரப்பட்டதாக குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் போது லொறி,கார் உட்பட ஆறு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

” SLPP எம்.பிக்கள் வாகனங்களை ஒப்படைக்க தயார்”

தனக்கும் தனது சக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ  வாகனங்கள் தேவையில்லை எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,   மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

மட்டு.பிறப்பு மற்றும் திருமண பதிவுக்கான நடமாடும் சேவை

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த  பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது புதன்கிழமை (12) அன்று பிரதேச  செயலாளர் உ.உதசிறீதர் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.