ரஷ்யா எண்ணெய் கப்பல் துறைமுகம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவுடன் விளம்பரத்தால் சர்ச்சை: பேச்சுக்கு இடமில்லை… ட்ரம்ப்

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உட்பட பல்வேறு பொருட்களுக்கும்  ஜனாதிபதி ட்ரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார்.

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்

‘அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,’ என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனமான பைகளுக்கு முடிவு கட்டவேண்டும்

பொருட்கள்  கொள்வனவு செய்யும் போது,  குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன்களை,  நுகர்வோருக்கு  இலவசமாக ஒரு விற்பனையாளர் வழங்கக்கூடாது.

அம்பாறைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறை தொடர்பான அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரும், நாட்டின் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ஞாயிற்றுக்கிழமை (02) அன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

ஐஸ், கசிப்புடன் இரு பிரபல வர்த்தகர்கள் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி,  திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட பொலிஸார் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் 24  போத்தல் கசிப்புடன் ஒருவர் உட்பட இருவரை  ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

யாழ் இளைஞர்களை இலக்கு வைத்த இருவர் கைது

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர், திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டனர். 

இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள் கைது

இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது முகாமையாளர் மற்றும் இலங்கை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர்   ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானத்தின் அமைவு குறித்த கள ஆய்வு

மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது.