அமெரிக்கா மேலும் உதவியது

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக  இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்கவுள்ளது.   இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர்  அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.

நிகழ்நிலை மூலம் மேன்முறையீடு செய்யலாம்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12ம் திகதி முதல் 2026.01.25ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியும்.

சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ கிராம் 120  ரூபாய், 125 ரூபாய் மற்றும் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு.

கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில்…

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரை நீக்கக் கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை (13) அன்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிசுப்பிசுத்தது விமலின் சத்தியாக்கிரகம்

கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் திங்கட்கிழமை (12) முதல் குதித்தனர்.

அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

6 ஆம் வகுப்புக்கான…. கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர்  டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பதில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானில் தொடர்ந்தும் 14 நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் 203 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’

ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.