கரையொதிங்கிய மியன்மார் தெப்பம்

திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் பௌத்த அடையாளங்களைக் கொண்ட தெப்பமொன்று புதன்கிழமை (14) அன்று  கரை ஒதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடியில் பதற்றம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இன்றைய நிலை என்ன…?

சர்வாதிகார ஆட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, பின்னர் திடீரென்று வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஈரான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. Authoritarian regimes die gradually then suddenly, but Iran is not there yet.
Jeremy Bowen
International editor.

மருத்து மனையில் உலகத் தரம் வாய்ந்த உணவுகள்

சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உட்பட இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னைய அரசாங்கங்கள் வழங்கி வந்த ஓய்வூதியம், Vehicle Permit உள்ளிட்ட மக்கள் பணத்திலான அதீத சலுகைகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சலுகைகளை அதிகளவில் இழப்பது தற்போதைய ஆளுங்கட்சியும், அதன் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுமே. இருந்தபோதிலும், மக்கள் சேவைக்கு வரும் பிரதிநிதிகளுக்கு மக்கள் பணத்தில் இத்தகைய அதீத சலுகைகள் தேவையற்றவை என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது.இவ்வாறான சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் பணம் மீண்டும் பொதுமக்களுக்கே நன்மைகளாகச் சென்றடைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

டிரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது.

படைகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் டிரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவி வருகிறது. இதனால் அங்கு உள்ள அமெரிக்க மக்களை வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியுள்ள இந்த சம்பவம் உக்ரைனுக்கும், அதற்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் அதிநவீன எஸ்-300 வான் வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி அமெரிக்காவின் இந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் பேச்சுக்கு அழைப்பு: ட்ரம்ப் ஆலோசனை

ஈரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவைத் தொடர்பு கொண்டுள்ளனர் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: ட்ரம்ப்

ஈரானுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளிலிருந்தான பொருள்களுக்கு 25 சதவீத வரியை தான் விதித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.