பிரதமர் உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

The Formula
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்
இந்த ஆண்டின் ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.
ஸ்பெயினின் தெற்குப் பகுதியான அண்டலூசியாவில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதியதில் 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மலகாவிலிருந்து மாட்ரிட்டுக்குச் செல்லும் ஒரு சேவை அடமுஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை (18) மாலை தடம் புரண்டு, மற்ற தண்டவாளத்தைக் கடந்து, எதிரே வந்த ரயிலில் மோதியதால் பேரழிவு ஏற்பட்டது,