தொண்டமான் பெயர் விவகாரம்: சீறி பாய்ந்தார் ஜீவன்

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் ஆனால் அது  தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழுக்கும் வருகிறது உலகக்கிண்ணம்

டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது.  டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. 

பொய் சொல்லி நூற்றுக்கணக்கில் இலவச விமானப் பயணம் செய்தவர்

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் விமானி, விமானச் சிப்பந்தி போல் ஆள்மாறாட்டம் செய்து நூற்றுக்கணக்கான முறை இலவசமாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

சமூகப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும்

இலங்கை சிறைகளில் அடைக்கக்கூடிய அதிகபட்ச கைதிகளின் எண்ணிக்கை 10,000 ஆகும். ஆனால் இந்த சிறைகளில் 30,000 பேர் உள்ளனர். வழக்கமாக, சில நாட்களுக்குப் பிறகு, இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இனி படுத்து தூங்க இடமில்லாமல் இருப்பார்கள்.

நியூசிலாந்தில் நிலச்சரிவு: பலர் மாயம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து பலர் காணாமல் போயுள்ளனர். நியூசிலாந்தில் நிலச்சரிவுகளுக்குப் பிறகு காணாமல் போன குழந்தைகள் உட்பட பலரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

பெண்கள் புறக்கணிப்பு தற்செயலானது அல்ல: பிரதமர்

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும் என்று  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது.

பாட்ஷா கான்

உலகிற்கு பாட்ஷா கான் என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும், எல்லைப்புற காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

வரட்சியான வானிலை 23 ஆம் திகதி மாற்றம் அடையும்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

’’ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது’’ – டிரம்ப்

ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நிறுவனம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உதவியாக இருக்கவில்லை என்று அவர் சொன்னார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திறன் குறித்து  தமக்குப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் நிறுவனம் ஒருபோதும் அதன் திறனை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.