“எமக்கு பிள்ளைகள் மாத்திரமே முக்கியம்”

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல; எமக்கு முக்கியமானது பிள்ளைகள் மாத்திரமே, எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

7வது முறையாக ஜனாதிபதியாகும் யோவரி முசவேனி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின்  ஜனாதிபதியாக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81) ஆகும். இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக உகாண்டாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

வடமாகாண தைப்பொங்கல் வி​​ழாவை புறக்கணித்த அமைச்சர், பிரதியமைச்சர்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில்     ஞாயிற்றுக்கிழமை (18) அன்று  காலை  நடைபெற்றது.

நவம்பர் மாத ’அனுர மீட்டர்’

‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.

ஈரானில் காலம் நெருங்கிவிட்டது – டிரம்ப்

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

(கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
)

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.

’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த  போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது  ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

’கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை’

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான வட்ட மேசை மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாரதிகளுக்கு ’குறைப்புப் புள்ளிகள்’

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இதை தெரிவித்துள்ளார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.