சுமார் 72.2 மில்லியன் (ஏழு கோடியே இருபத்தி இரண்டு லட்சம்) ரூபாய் பெறுமதியான ‘ஹஷீஷ்’ (Hashish) மற்றும் ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த 5 இலங்கை பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Month: June 2026
நாய்களை ஏவி பொலிஸாரைக் கடிக்கச் செய்த பெண்
சட்டவிரோத மதுபான விற்பனையாளர் ஒருவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது, அந்த நபரின் மனைவி நாய்களை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கும்புருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
பெண் பிசியோதெரபிஸ்ட் கொலை: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது
குண்டசாலை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, நுவரெலியாவிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, அம்பாறை வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களுக்கு அமைய, இந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலநடுக்க இடிபாடுகளில் 32 மணிநேரம் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை மீட்பு
FIFA 2026: சுற்று 32-க்கான அட்டவணையும் இறுதிப் போட்டிக்கான பயணமும்
‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்’
யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடத்தில் எழுந்துள்ள பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டின் பின்னணியும் உண்மைகளும்!
பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியரை பாதுகாக்க அறம் தவறிய வழிகளை நாடும் அவரது மனைவியின் மனச்சாட்சியற்ற வெட்ககேடான செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் குறித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவியோடு நடத்திய தொழில் நெறிமுறையின் எல்லை தாண்டிய உரையாடல்கள் சமூக ஊடகங்களில் கசிய வந்திருந்தன.

’டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்’
உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்
எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
கல்பிட்டியவிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதேவேளை கடற்றொழிலாளர்களையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
