உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?

(Shanmugan Murugavel)

ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கு முன்னராக இறுதிச் சுற்று சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகள் இவ்வாரம் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், ஏறத்தாழ உலகக் கிண்ணத்தில் தாம் களமிறக்கப் போகும் அணிகளையே இவ்வார, கடந்த வார போட்டிகளில் அணிகள் களமிறக்கியிருந்தன.

(“உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?” தொடர்ந்து வாசிக்க…)

மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?

வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால், அவரது இவ்வெற்றி, வெனிசுவேலா மீது புதிய தடைகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஜனாதிபதி மதுரோவுக்கு 5.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதம வேட்பாளர் ஹென்றி ஃபல்கொன்னுக்கு, 1.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன.

(“மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!

கர்நாடகத்தில் முதல்வராகப் பதவியேற்ற வேகத்தில் ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. ஜனநாயகம் தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்தில் 222 இடங் களுக்குத் தேர்தல் நடந்தது. 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற் கான எண்ணிக்கை அதனிடம் இல்லை. மாறாக, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸின் ஆதரவுடன், 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையுடன் ஆளுநரை அணுகியது. மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டியதே ஆளுநர் வஜுபாய் வாலா எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவு. ஆனால், குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அந்த வாய்ப்பை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு வழங்கினார் ஆளுநர். கூடவே, பெரும்பான்மை வலுவை நிரூபிக்க தாராளமாக 15 நாட்கள் அவகாசமும் எடியூரப்பாவுக்கு அளித்தார் ஆளுநர்.

(“ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

(ஷிவ் விசுவநாதன்)

இந்தியாவில் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் தோற்பதே காங்கிரஸின் வழக்கமாகிக்கொண்டிருக் கிறது. பார்வையாளர்களான மக்கள் திகைத்துக் கரகோஷம் செய்யும்போது, தொப்பிக்குள்ளிருந்து முயல்களாக இழுத்துத் தள்ளும் மந்திரவாதியைப் போல, பாஜக தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது.

(“கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!” தொடர்ந்து வாசிக்க…)

மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் கைது

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

(“மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் கைது” தொடர்ந்து வாசிக்க…)

பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு

 

பிஹாரில் தொடங்கி கர்நாடகத் தேர்தல் வரை அரசியல் மரபுகளையும், ஒழுக்கத்தையும் மீறி செயல்பட்டதால் தலைக்குனிவு சம்பவங்களை பாஜக தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்ற எண்ணுகையில், கர்நாடகாவிலும் தப்புக் கணக்கு போட்டு ஆட்சியைக் கபளீகரம் செய்ய நினைத்து பாஜக தோல்வி அடைந்துள்ளது.

(“பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக..….. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற்றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

(“மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்

அரசும் புலிகளும் செய்துகொண்ட சமாதன உடன்படிக்கை காலத்தில், ஆயிரக்கான தமிழர்கள் மட்டும் புலிகளால் துரோகி என முத்திரை குத்தி கொல்லப்பட்டார்கள்.

இதை விட ,முஸ்லீம்கள், சிங்களவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கொன்று குவித்த புலிகளின் வீர வரலாறு தனியானவை.

(“முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)

இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது

இன அழிப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்கள் நிச்சயமாக இந்த முயற்சியைக் கைவிடக் கூடாது. ஏனெனில் இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது என்பதை நவநீதம்பிள்ளையின் அறிக்கை நிரூபிக்கும். இப்படியான விசாரணை ஒன்று நடைபெற்றால் தான், தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போவதாகப் போராடியதாகச் சொன்ன புலிகள் தங்கள் சொந்த மக்களைப் படுகொலை செய்தார்கள் என்ற உண்மைகள் எல்லாம் வெளியே வரும். தூக்கிச் சென்று ஹாக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு தலைவர் இல்லாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் வெளிக் கொணரப் பட வேண்டும்.

(“இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது” தொடர்ந்து வாசிக்க…)