பாகிஸ்தானும் தலிபான்கள் வசமாகுமா? போராளிகள் மத்தியில் நிலவும் துடிப்பு

பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது.  ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.

தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

திருகோணமலை குச்சவெளி வசந்த் தோழர் சந்திரன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் தோழருக்கு கண்ணீர் அஞ்சலி

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று (06) அறிவிக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் மெக்மிலன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?….

நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆயுவு கட்டுரையில் தெரிவிக்கிறது. இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian – சுயநலத்தின் கலாச்சாரம்.
இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.

மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி

மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41,262 மாணவர்களில், 30,812 பேர் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர். இந்தப் பெறுபேறுகளின் வீதம் 74.67 அதிகரித்துள்ளது  என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராட்டத்து ஆசிரியர்கள் முஸ்தீபு

ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, மாபெரும் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 312 பிரதேச கல்வி அலுவலகங்களின் அடிப்படையில், இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த இடையூறுகள் வந்தாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அவர் கூறினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையும் கடுமையாக சரிவு….

நாட்டில் மேலும் 542 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 520,175 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 652 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது.

ரோஹித ராஜபக்ஷ முதலமைச்சர் வேட்பாளர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், மும்பை உட்பட அரபிக்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக வந்து செல்லுவதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையும் அபாயம்

அடுத்த 45 ஆண்டுகளில் சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையுமென்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது. முந்தைய ஆய்வுகள்  சனத்தொகை வீழ்ச்சியின் வேகத்தை கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம்  பிறப்பு வீதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.3 குழந்தைகளாக இருந்ததாக சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.