கதிர்காமம் தொடர்பாக 1977 இல் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கு

(Tharshanth Rajenthram)

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமான சட்டம்

ஜனநாயக நாடொன்றில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையுமாக இருக்குமாயின் அங்குதான், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கும். அப்போது  சட்டம், ஒழுங்கைப்   பேணுவதற்காக முப்படையினரையும் களத்தில் இறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

(செங்கதிரோன்) 

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் 

சென்றதடவை மட்டக்களப்பு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மண்வாசனைச் சொல் ‘கா’ பற்றிப் பேசினோம். 

இத்தடவை வேறு பல விசேட சொற்களை எடுத்து நோக்குவோம். 

பசுமையான பூமி! அது பேசுவதை கேட்போம்!” அதை பாதுகாப்போம்!

(Rathinam Ramasamy)

“1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

2. எனது பிறப்பு – 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)

மரம்

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார்.

ஈழத்தின் தலைநகர் – சதுர்வேத மங்கலம்- கந்தளாய் குளம்

ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய் குளம் .வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி.கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் கொண்ட சேர்க்க வேண்டியது கடமையாகும்.

‘தை பிறக்கட்டும்’

கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.  

கேட்டிருப்பாய் காற்றே…

(தென்னவன் வெற்றிச்செல்வன்)

மரபான உணவுப் பயிரான நெல் உற்பத்தியிலிருந்து காலனியத்துக்குக் கொள்ளை லாபம் தரும் பணப்பயிர் உற்பத்திக்கு மாறியதால், உலகெங்கும் உழைப்பு சக்தி தேவை உருவாக்கப்பட்டது. ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், சுரங்கத் தொழில், இருப்புப் பாதை அமைத்தல், காட்டை அழித்து வசிப்பிடமாக்குதல் என்று 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய காலத்தில் தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தனர்.

மாதவிடாய்

(தாரைப்பிதா)

சமீபத்தில் Star (ஸ்டார்) என்ற மலையாள திரைப்படம் பார்த்தேன். குறிப்பிட்ட வயதில் மாதவிடாய் (மெனோபாஸ்) முற்றுப்பெறும் ஒரு பெண்ணுக்கு அந்த கட்டத்தில் ஏற்படும் மனக்குழப்பங்கள் அவரது வீட்டாரால் எப்படி தவறாக பார்க்கப்படுகிறது என்பதே படத்தின் மையக்கரு.