யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
எந்த நாட்டின் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?
’எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ ஈரானுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்
புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் Saad al-Kaabi எச்சரித்துள்ளார்.
அவசரகால சட்டம் நீடிப்பு
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கு 100 மேலதிக வாக்குகளினால் சபை அங்கீகாரமளித்தது பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கான விவாதம் இடம்பெற்றது.
ஈரானிய கப்பல், மாலுமிகளுக்கு அடைக்கலமளித்த இந்தியா
சரணடைவது மட்டுமே தீர்வு: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு
டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, டுபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ மட்டத்தில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்
அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய ஜனாதிபதி மசூட் பெஸ்கிஸ்தான் தெரிவித்துள்ளார். பிரேரணையை ஈரானின் இடைக்கால தலைமைத்துவ சபை வெள்ளிக்கிழமை (06) அங்கிகரித்ததாக ஜனாதிபதி பெஸ்கிஸ்தான் இன்று கூறியுள்ளார். இதேவேளை அண்மைய நாள்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அயல் நாடுகளிடம் பெஸ்கிஸ்தான் மன்னிப்புக் கோரியுள்ளார்.

