பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

(“பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

1000/- நாள் சம்பளத்தையும் 25 நாட்கள் வேலையையும் உறுதிப்படுத்து!”

மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு காணாத தன்னெழுச்சிப் போராட்டத்தை அனைத்து ஜனநாயக, மனிதாபிமான சக்திகளும் முழுமையாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்கள், பெண்கள், முதியோர் அனைவரும் களம் இறங்கியுள்ளனர். கட்சிகள், தொழிற்சங்கங்கள் தலைமைகொடுப்பதற்கு முன்னரே தன்னேழுச்சியாக திரண்டுள்ள மக்களின் உணர்வுகளையும், தயார் நிலையையும் உரிய வகையில் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. இந்த தன்னம்பிக்கையும், ஓர்மமும், பிரக்ஞையும் சோராத வகையில் தக்கவைப்பதன் மூலம் மட்டுமே இனி வரும் எந்த நீதியான கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். எனவே எம் மக்களின் போராட்டம் வீண்போகாத வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறோம் தோழர்களே.

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது புலிப்பினாமிகளுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. வடகிழக்கில் அமைதி இல்லை, சுமூகமான சூழல் இல்லை. தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை.தமிழர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்கிறது என்றேல்லாம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இவர்களின் பிரச்சாரத்தைப் பொய்யாக்குகிறது.

(“யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

நிலாந்தனின் கட்டுரையும் சில சாதாரண வாதங்களும்

(Kiri Shanth with Arun Ambalavanar.)

முடிவு ஒன்று – தமிழ்த் தலைவர்களுள் மிகச் சிலரே புவிசார் அரசியல் தொடர்பில் சரியான தரிசனங்களோடு இருக்கிறார்கள். அல்லது புவிசார் அரசியலைக் குறித்து ஒரு பொது மேடையில் உரையாற்றக் கூடிய ஆழத்தோடு இருக்கிறார்கள்.

(“நிலாந்தனின் கட்டுரையும் சில சாதாரண வாதங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பிலிபைன்ஸ் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட கனடியத் தமிழர் சுட்டுக்கொலை!

(த ஜெயபாலன்)
பிலிபைன்ஸில் சுட்டுக்கொல்லப்பட்ட நிரஞ்சன் சச்சிதானந்தனந்தம் (39) என்பவரின் மரணக் கிரியைகள் நேற்று ஒக்ரோபர் 9, 2016 கனடா வன்கூவர் மாநிலத்தில் நடைபெற்றது. போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபட்ட மக்ஸ் என்றழைக்கப்படும் நிரஞ்சன் சச்சிதானந்தம் செப்ரம்பர் 14, 2016இல் பிலிப்பைன்ஸில் லா யுனியன் என்ற பகுதியில் உள்ள சன் யூஆன், பரங்கே ரபொக் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

(“பிலிபைன்ஸ் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட கனடியத் தமிழர் சுட்டுக்கொலை!” தொடர்ந்து வாசிக்க…)

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்

(மொஹமட் பாதுஷா)

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?” என்று. அதற்கு பதிலளித்த அந்த முஸ்லிம் நபர், “நீங்கள் உங்களது பிரித்தானிய மகாராணியை நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா? முடிக்குரிய இளவரசியுடன் கைகுலுக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பிரித்தானியர், “இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை” என்றார். “ஏன் அதற்கென்ன காரணம்?” என்றார் முஸ்லிம் நபர். “அவர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களைக் காண்பது அரிதான வாய்ப்பாகும். அப்படிக் காணக்கிடைத்தாலும் அவர்கள், கையுறை போட்டுக் கொண்டே கைகுலுக்குவார்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த முஸ்லிம் நபர் சொன்னார், “நாங்களும் எங்களது வீட்டிலுள்ள பெண்களை, மகாராணியாகவும் இளவரசியாகவுமே பார்க்கின்றோம். அதனாலேயே, பிற ஆண்கள், அவர்களை முகத்துக்கு முகம் சந்திப்பதற்கான, கைகலுக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என்றார்.

(“மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு இணையானது என கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்ற விஜயரத்னம் சீனியன் என்ற இலங்கையர் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(“கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்

(கிருஷாந் உடன் சாகரன்)

மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலைகள் மின்னல் வேகத்தில் ஏறினாலும் அம்மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு கூட்டப்படவில்லை.மிக மோசமான உழைப்பு சுரண்டலை எதிர்கொள்கின்றனர். எத்தனையோ மனித உரிமைகள் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் இருந்தும் இந்த விடயம் குறித்து கவனம் எடுக்கவில்லை.

(“மலையக மக்களின் போராட்டத்துடன் நாமும் இணைவோம்” தொடர்ந்து வாசிக்க…)