மீண்டும் எழுந்து வாரீரோ…..?.

ஆண்டு 1993. ஜனவரி 15 தேதியிடப்பட்ட கடிதம் யாழ்ப்பாணத்தில் எங்களிற்கு கிடைத்தது மார்ச் 12. கொழும்பில் இருந்து மைத்துனன் அனுப்பியது. அதன்பிற்பாடே எங்களிற்கு தெரியும் 29 டிசம்பர் 1992 இல் நெல்லியடியில் இருந்து புறப்பட்ட மாமா கொழும்பைச் சென்றடையவில்லை என்பது.யாழ்ப்பாணம் பிரேமதாசாவின் கிடுக்குப்பிடியில் இருந்தது அந்நேரத்தில்.

(“மீண்டும் எழுந்து வாரீரோ…..?.” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா ,மனோமாஸ்டரின்  பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள்.பல தேடல்களை தானே தேடினாள்.ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட  உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன. அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது.

(“சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும்’

‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பில் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான், ஜெயலலிதாவால் முழுமையாக வைத்தியசாலை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். சட்டம் ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

(“‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும்’” தொடர்ந்து வாசிக்க…)

கியூபா, வியட்னாமில் இராணுவத் தளங்கள் குறித்து ரஷ்யா ஆலோசனை

வியட்னாம், கியூபாவில், தனது இராணுவப் பிரசன்னத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ரஷ்யா கருத்திற் கொள்வதாக, ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு, இரண்டு தளங்களை மூடுவதற்கு எடுத்த முடிவு குறித்து மீளாய்வு செய்வதாக நிகொலாய் பன்கொவ் தெரிவித்துள்ளார். பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் மையங்களாக இரண்டு தளங்களும் விளங்கியிருந்தன.

(“கியூபா, வியட்னாமில் இராணுவத் தளங்கள் குறித்து ரஷ்யா ஆலோசனை” தொடர்ந்து வாசிக்க…)

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்

சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.

(“உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்

‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார்.

(“அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.

சோவியத் யூனியனில் “தத்துவார்த்தம் ஊட்டப் பட்ட சமூகம்” இருந்ததாக சிலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதாவது, மாணவர்கள், மக்கள் எல்லோரும் “சித்தாந்தத்தால் மூளைச் சலைவை” செய்யப் பட்டனர் என்பது தான் அவர்கள் சொல்ல விரும்புவது. அது சுத்த அபத்தமான கற்பனை. முதலில் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் பெரும்பாலான பாடங்கள் பொதுவானவை. வரலாறு, சமூகவியல் போன்ற பாடங்கள் மட்டும் தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்.

(“சோவியத் பாடசாலைகளில் மதக் கல்வி போதிக்கப் படவில்லை.” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நாவின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவானார்

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்டனியோ கட்ரெஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, அடுத்த செயலாளர் நாயகமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய, ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன்பின்னர், புதிய செயலாளர் பதவியேற்பார்.