ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

என்னையும் ஆசிரியராக்கிய எனது ஆசிரியர்களின் நினைவுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க வைக்கும் இந்த ஆசிரியர் தினத்தை நான் நினைவு கூர்வதில் மகிழ்ந்து நிற்கின்றேன். புலம் பெயர் தேசத்து பட்டமும் இதனைத் தொடர்ந்த பயிற்சிகளும் என்னை கணணித்துறையில் வாழ்க்கையிற்கு தேவையான பொருளீட்டுதலுக்கான பணத்தைத் தேடுவதில் ஈடுபடுத்தியிருந்தாலும் நான் ஆசிரியராக என்னை அடையாளப்படுத்துவதில் மகிழ்ந்திருக்கின்றேன். மகிழ்ந்திருக்கின்றேன் என்பதையும் விட எனது அடையாளமாக ‘மாஸ்ரர்” என்பதே பொது வெளியில் அதிகமாக இருக்கின்றது தெரிகின்றது. தொடரந்தால் போல் 40 வருடங்களாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தில் ஈடுபடுவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

(“ஆசிரியர் தினத்தில் என் அனுபவப் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்

சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ என்கிற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 01, 2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒரு நூல் வெளியீட்டு விழா என்கிற அளவோடு மாத்திரம் நின்றுவிடாமல், ‘புவிசார் அரசியலில் கைதிகளாய் இருக்கின்ற ஈழத் தமிழர்கள்’ என்கிற விடயத்தினை முன்னிறுத்திய திறந்த கலந்துரையாடலாகவும் அந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

(“யாழ். கூச்சல் குழப்பங்களும் கொழும்பின் கொண்டாட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி

வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு

(கவிதா சுப்ரமணியம்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

(“சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை

நெத‌ர்லாந்தில், பொருளாதார‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌, வேலையில்லாப் பிர‌ச்சினை நில‌விய கால‌த்தில், இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் த‌பால்கார‌ர் வேலை செய்து வ‌ந்தேன். அப்போது என்னுட‌ன் ஒரு க‌ன‌டிய‌ (வெள்ளையின‌ப்) பெண்ணும் வேலை செய்தார். க‌ன‌டா ப‌ற்றி அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌ன‌.

(“கனடாவில் தொழிலாளர் போதியளவு வருமானம் பெறுகின்றார்கள் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

(“உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

(“முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!” தொடர்ந்து வாசிக்க…)

சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி

சீனா உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ தொலைநொக்கி மற்றும் உள்வாங்கியை நிறுவி, வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக ரகசியமாக பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ஒரு விடையத்தில் இறங்கி அது தொடர்பாக ஆராய்கிறார்கள் என்றால் அதனை நாம் வெறுமனவே அசட்டை செய்ய முடியாது. அவர்கள் ஏதோ ஒன்றை குறிவைத்து ரகசியமாக ஆராட்சிகளை மேற்கொண்டு வருவதும். இது தொடர்பாக அவர்களுக்கு ஏதோ தகவல் கிட்டி விட்டதா ? என அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலமை உள்ளது. உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள் வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக பல ஆரட்சிகளை செய்து வருகிறது. ஆனால் அவர்கள் வேற்றுக் கிரக மனிதர்களை கண்டு பிடித்து அவர்களோடு கை குலுக்க இதனைச் செய்யவில்லை.

(“சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்குராா்ப்பணம்

 

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அங்குராா்ப்பண நிகழ்வு 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் நண்பா்கள் விடுதியில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா் அவா்களின் வழிநடத்தலில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள மேற்படி அமைப்பானது தனது அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடா்பில் செயற்பாட்டாளா்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது.

வடக்கும் கிழக்கும்

இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.

(“வடக்கும் கிழக்கும்” தொடர்ந்து வாசிக்க…)