தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

(“தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு

(சட்டத்தரணி இ. தம்பையா)

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 18 மாதங்கள் வரை சம்பள உயர்வு இன்றி உழைப்பதற்கும் வாழ்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் இன்று பொறுமை இழந்துள்ள நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் உடனடியாக நியாயமான சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும். தோடத்த தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றினை கம்பனிகள் அறியாதிருக்க நியாயமில்லை. எனவே, பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி பாரிய தொழில் உறவு பிரச்சினையாக மாற்றி பெருந்தோட்டக் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையை விடுத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும்; உள்ளது. அப்பொறுப்பை கம்பனிகளும் அரசாங்கமும் நிறைவேற்றாவிடின் விளைவுகளுக்கான பொறுப்பையும் கம்பனிகளும் அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் கம்பனிகளின் இன்றைய விடாப்பிடியான நிலையை கருத்திற் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தமது தனித்தனியான நிலைப்பாடுகளை விட்டு தொழிலாளர்களுக்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன.

(“ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கள்ள மௌனம் சந்தேகத்தைத் தருவதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மேலாதிக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் இருப்பதாலேயே வடக்கில் தமிழர்கள் மாத்திரம் வாழும் பகுதிகளிலும் பெரும் எடுப்பில் பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள் உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

(“சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!” தொடர்ந்து வாசிக்க…)

அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

(“அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் உள்ள‌ அதிச‌ய‌ப் ப‌ட‌த்த‌க்க‌ ஒற்றுமை ஒன்றுள்ள‌து. இர‌ண்டையும் உருவாக்கிய‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள். சிங்க‌ள‌த் தேசிய‌ பிதாம‌க‌ர்க‌ளான‌ அந‌காரிக‌ த‌ர்ம‌பாலா, டி.எஸ். சேன‌நாய‌க்க‌, ப‌ண்டார‌நாய‌க்க‌, ஜெய‌வ‌ர்த்த‌ன‌ எல்லோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். அத்துட‌ன், சிங்க‌ள‌த்தை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேச‌த் தெரிந்திருந்த‌ன‌ர்.

(“ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை” தொடர்ந்து வாசிக்க…)

தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்

(டி. சக்திய சிவா)

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்…

தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..

(“தாய்மை அன்பு கொண்டு கோயில் கட்டிய சோழன்-கவனிப்பாரற்று கிடப்பது ஏன்” தொடர்ந்து வாசிக்க…)

India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…

(By Keith Jones)

Four days after India conducted “surgical” military strikes inside Pakistan-held Kashmir, South Asia’s rival nuclear-armed states continue to teeter on the brink of war. There have been hours-long artillery and gun-fire exchanges across the Line of Control (LoC) that separates Indian- and Pakistani-held Kashmir each night since India sent troops and helicopters into Pakistan and inflicted “double-digit” casualties.

(“India and Pakistan Teeter on the Brink of War: Bellicosity Encouraged by Washington…” தொடர்ந்து வாசிக்க…)

என் மாமா…

(கமலாகரன்)

 

ஈழவிடுதலைப் போராட்டம் தந்த ஒப்பற்ற உறவு.
தேசத்தின் அனர்த்தங்கள் விளைவித்த நாசம்… நேசம் துறந்து உறவுகளைப் பிரிந்து தமிழகம் வந்தேன்.
வாராது வந்த மாமணியாய் வந்தாள் என் வாழ்வில் ஒரு சமூகவிடுதலைப் போராளிப் பெண்.
எல்லாம் இழந்த மனோ நிலையில் ஒரு மன நோயாளிபோல் வாழ்ந்து திரிந்த என்னை தன் துணையாய் ஏற்க முன் வந்தாள்.
நான் யார். என் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் நான் சொல்லாமலே எல்லாம் அறிந்திருந்தாள் முன்கூட்டி என்னைப் பற்றி.
திருமணம் வரை நகர்ந்த எம்முறவில் முதன் முதலில் என் மாமனாரை பார்த்தது என் திருமணத்தன்றுதான்.

(“என் மாமா…” தொடர்ந்து வாசிக்க…)

நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016

அற்புதமான நடிகன் என்பதோடு நான் மானசீகமாக அவரை என் நடிப்புக் குருவாகவும் ஏற்றுக் கொண்டவன்.அவர் நினைவை ஒரு கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியும்

இருவருமே நடிப்பு என்று பேசும் போது சாதனை படைத்தவர்கள்.ஒருவகையில் இருவருமே கண்டு பிடிப்பாளர்கள்தான்.லாஸ்கி நடிகனின் மனம் அதன் வழி வரும் முறை நடிப்பு அதற்கான பயிற்சிகள் என அவர் இன்று வரை நடிகர்களுக்கான ஒரு கையேடு.

(“நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான்.இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு.அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள் ,வயல்கள் ,காடுகள், தென்னம் தோப்புகள் ,தோட்டங்கள் ஆறுகள் ,சிறிய குளங்கள் ,கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை. அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)