கோட்டாவுக்கு எதிராக ஆஸியில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக மெல்பேர்னில் உள்ள இலங்கையர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக “எங்கள் நாட்டை நாசமாக்காதீர்கள்” என்ற போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)

பேராதனையில் பதற்றம்

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கிளி. சிறுபோகத்துக்கு மொனராகலை உரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான சேதன உரம், மொனராகலை மாவட்டத்திலிருந்து  600 லொறிகளில் எடுத்து வரப்படவுள்ளதாக, மாவட்டச் செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விரைவில் புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

கொழும்பு, மஹரகமவில் பதற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர்.

24 மணி நேரத்துக்குள் பாரிய மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார். இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது.

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்படியொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததே இல்லை என்றுதான் உலக ஊடகங்கள் அனைத்துமே விமர்சிக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் பொறுக்க முடியாது என்ற கோபத்துடன் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடத் தொடங்கினர். அடுத்தடுத்து இரண்டு நாட்களும் போராட்டம் நடைபெற இரவோடு இரவாக அவசரநிலையை பிரகடன்ப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இப்போதும் நாடு தழுவிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்

(நாதன்)

நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும் தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக… கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது.