கடலோர ரயில் ஓட்டுநர்கள் நண்பகலுடன் விலக முடிவு

கடலோர ரயில் பாதையில் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் குழு ஒன்று ரயில் சேவைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் டிரைவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமானம் இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்காவிலிருந்து நேற்று (05) மாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

லஞ்சம் கேட்ட இருவர் பணிநீக்கம்

கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை அகற்ற வந்த ஒரு துறைமுக எழுத்தரிடம் (wharf clerk)கூடுதலாக ரூ.35,000 லஞ்சம் கேட்ட இரண்டு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்த துறைமுக தொழிற்சங்கத்தின் பிரதிநிதி என்று கூறப்படுகிறது, மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

கடவுச்சீட்டு விவகாரம்: மூவருக்கும் பிணை

துபாயில் தலைமறைவாகியிருக்கும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல் பத்ரா பத்மேவுக்கு கடவுச்சீட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழல் தினம்: ஜுன் 05, 2025


(தோழர் ஜேம்ஸ்)

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்.

அதிகரித்து வரும் நெகிழியினால்(பிளாஸ்டிக்) சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுப் பிரச்சனையை எதிர்த்துப் போராட அனைவருக்கும் சவால் விடும் கருப்பொருளாக, 2025 ஆம் ஆண்டுக்கான இந்த உலக தினத்தை இம் முறை கொரியா குடியரசு நடத்துகிறது.

சாரதியின் பெயரில் காணி வாங்கிய முன்னாள் அமைச்சர்?

பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தை அண்மித்துள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் அதை தனது ஓட்டுநர் பெயரில் வாங்கியதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பகிடிவதைகளுக்கு எதிராக ஹரிணி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என  கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) கையெழுத்திட்டார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சுற்றுசூழலை பாதுகாப்போம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் 1972ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினமாக’ அறிவிக்கப்பட்டது.

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது