வெசாக் போயா பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய  அதுல திலகரத்னவுக்கு, அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி டாக்டர் நளின் டி ஹேவாவசம் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார்.  வழக்கு தொடுத்த மருத்துவருக்கு ரூ. 4 மில்லியன் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், எதிர்வரும் திங்கட் கிழமை (28)ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40 நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்க தீர்மானம்

நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

219 மருந்தகங்களின் உரிமம் ரத்து: அமைச்சர்

2025 ஜூலை 18, க்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை, தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA)   ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அதி சொகுசு மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக  இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து – கம்போடியா ராணுவ மோதலால் பெரும் பதற்றம்: 1,38,000 மக்கள் தஞ்சம்

தாய்லாந்து – கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை இனவழிப்புக்கு எதிர்ப்பு: மானிப்பாய் உறுப்பினர் வெளிநடப்பு

மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லோக பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதன்போது சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார். 

“மாகாண சபைகளை பலவீனப்படுத்த முயற்சி”

மாகாண சபைகளை சகல அமைச்சுகளும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.  

இதுவரை 74 துப்பாக்கிச் சூடு; 40 பேர் பலி

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை (24) வரை நாடு முழுவதும் 74 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்துள்ளன.இவற்றில் 40 பேர் இறந்துள்ளனர், சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். கல்கிசை பொலிஸ் பிரிவில் மட்டும் இதுவரை 08 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் இரட்டைக் கொலை உட்பட 04 கொலைகள் மற்றும் 04 துப்பாக்கிச் சூடு முயற்சிகள் அடங்கும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய மூவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் நக​ர சபை மேயர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெறு​மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.