இலங்கை- இந்தியா 7 ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (04) தள்ளுபடி செய்யப்பட்டன.

காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) அன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடினர்.

சஜித் அணியின் சூதாட்ட கூடம் சிக்கியது

இபலோகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நடத்தி வந்த சூதாட்டக் கூடத்தை பொலிஸார் சுற்றி வளைத்து, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்தனர். இபலோகம, குஞ்சிக்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டக் கூடம் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, உஷார் நிலையில் இருந்த இபலோகம காவல்துறையினர், இன்று (04) நடத்திய சோதனையில் அந்தக் குழுவைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எஸ்.ஜே.பி பிரதேச சபை உறுப்பினர், சூதாட்டக் கூடத்தை நடத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சூதாட்டக் கூடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குஞ்சிக்குளம், மடடுகம, கெகிராவ, எப்பாவல, கட்டியாவ, கரம்பேவ, தனவா மற்றும் கல்னேவ உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்

8 ​NICயுடன் கண்டியில் ஒருவர் கைது

கண்டி எசல பெரஹெராவை ஒட்டி நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, 08 தேசிய அடையாள அட்டைகளை (National Identity Card) வைத்திருந்த ஒருவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக மூத்த  பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.

போதையில் இருந்த சாரதிக்கு விளக்கமறியல்

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,

அமைச்சர் வசந்த அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்கிறாரா?

அக்கட்சியினர் தங்கள் சம்பளத்தை கட்சிக்கே வழங்குவதால் அமைச்சர் வசந்த சமரசிங்க அஸ்வெசும கொடுப்பனவில் தான் வாழ்கிறாரா என்று யோசனை எழுகிறது, என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலகே கூறினார். 

ஸ்கேன் ஆய்வில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும

” முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். என தெரிவித்த  அமைச்சர் வசந்த சமரசிங்க  ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார் 

கடல் நீருக்காக போதுமான அளவு எவரும் அழவில்லை

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன்டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

பல மில்லியன்களை சுருட்டிய ஓய்வுபெற்ற பேராசிரியர் கைது

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த பேராசிரியர், முதுகலை மேலாண்மை நிறுவனத்தின் டுபாய் கிளையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர், பல மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.