ரணில் கைது : நீதவான் அதிரடி

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.

ரணில் கைது

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

உலக புகைப்பட தினத்தன்று நினைவுகூருகிறோம்

சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் தினம் ஒகஸ்ட் 19 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இது உலக மனிதாபிமான தினமும் கூட. அரசியல்வாதிகளின் ஒப்பந்தக்காரர்களால் போர்க்களங்களிலும் தெருக்களிலும் கொல்லப்பட்ட அனைத்து புகைப்படக் கலைஞர்களும் இந்த நேரத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இலத்திரனியல் வருகை பதிவும்; அஞ்சும் அரச ஊழியர்களும்

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், கடமைக்கு வரும் நேரத்தையும், கடமை முடிந்து செல்லும்  நேரத்தையும் உறுதி செய்யக் கைவிரல் அடையாளம் வைப்பது நடைமுறையில் உள்ளது. எனினும், அரச நிறுவனங்களில் அவ்வாறான நடைமுறை இல்லை.

100 கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்

கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளிலும் இடையூறுகளை நீக்குவது இதன் நோக்கமென டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

யாழில் 14 பாடசாலைகளின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின்  14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு,   அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

பிரதமர் முஸ்லீம் காங்கிரஸ் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (20) அன்று பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

”கச்சத்தீவை மீட்டு கொடுங்கள்“ – விஜய்

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது…

அங்கயற்கண்ணி

“நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா”
“நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும்”

கூலியின் தோல்வியும் வேலியின் தோல்வியும்


(தோழர் ஜேம்ஸ்)

கோடிகளில் இலாபங்களை திரைப்படம் தியேட்டருக்குவரும் முன்பே கல்லா கட்டும் வியாபார சினிமா தமிழ் திரைப்படத் துறையில் ஒரு புறம். இதில் உச்ச நட்சத்திரங்களை அவர்களை இயக்கும் உச்ச இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்.