ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு பலர் பலி

கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.

‘யுத்தத்தை நிறுத்துவதை ரஷ்யா சிக்கலாக்குகிறது’

யுத்தநிறுத்தமொன்றுக்கு ரஷ்யா இணங்க மறுப்பதானது யுத்தத்தை நிறுத்தும் செயற்பாடுகளை சிக்கலாக்குவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திப்பதற்கான அந்நாட்டுத் தலைநகர் வொஷிங்டன் டி.சிக்கு நாளை ஜனாதிபதி ஸிலென்ஸ்கி பயணமாகவுள்ளார்.

வெள்ளம்: ‘பாகிஸ்தான் மாவட்டத்தில் 200 பேரைக் காணவில்லை’

வட மேற்கு பாகிஸ்தானின் மாவட்டமொன்றில் பேரழிவை ஏற்படுத்திய பருவகால வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 200க்கும் அதிகமானோரைக் காணவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மிரில் அண்மைய நாள்களில் திடீர் வெள்ளங்களால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்ச மாதாந்த வருவாயைப் பதிவு செய்தது இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத் திணைக்களம் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்து, 235 பில்லியன் ரூபாய்களை வசூலித்ததாக பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்தார்.

ஹர்த்தாலுக்கு மு.கா ஆதரவு

இலங்கை இராணுவத்தினரால் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கள்கிழமை (18) ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தனது ஆதரவை அறிவித்தது.

உணவகத்தில் தாக்குதல்: கணவன் பலி: மனைவி படுகாயம்

துனகஹா-கொடிகமுவ சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர்.

புட்டினுக்கு டிரம்ப் மனைவி எழுதிய முக்கிய கடிதம்

சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷ்யா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீது ரஷ் யா கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை

இலங்கையில் தமிழ் மொழி  மூலம் இயங்கிவரும் மகளிர் அமைப்புகளை இனங் கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி  நடவடிக்கை எடுக்க உள்ளது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவிக்கிறார்

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.  இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

“ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது தெரியாது”

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாகும். எனவே,  நாம்  அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.