மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனினும், நாளைமுதல் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வோர். இன்று மட்டும் என கூறி மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர்.
Month: October 2025
நெடுந்தீவில் எரிபொருள் நிலையம்
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
அணித் தலைவரை தூக்கியது இந்தியா
கொட்டாஞ்சேனை மேற்கு தலைவராக ஆனந்தகுமார் நியமனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒன்றான பிரஜா சக்தி திட்டத்தின் கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் தலைவராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவினால், அக்டோபர் 02 ஆம் திகதி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
விமலுக்கு அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது. “பெலியத்த சனா” என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்.
மின்சாரக் கட்டணம் 6.8 சதவீதத்தால் உயர்வு?
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
