எரிவாயு தட்டுப்பாடு இல்லை: லிற்றோ

டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.

நீண்ட கால பிரதமர் படுதோல்வி

தென் அமெரிக்காவிற்கு வடக்கே அமைந்துள்ள செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டில் நடந்த தேர்தலில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிக நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்ற ரால்ப் கோன்சால்வ்ஸ் தோல்வியை தழுவியுள்ளார்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலி விபத்து

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலி லுணுவில கிங் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கம்பளையில் பெரும் துயர்

கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100 க்கும் அதிகமானோர் மரணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இடுபாடிகளில் சிக்கிய உடல்களை இன்னும் மீட்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. உறவுகளை இழந்து மக்கள் தவிக்கிறார்கள்.

இதுவரை 968,304 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையில் இதுவரை 9 இலட்சத்து 68 ஆயிரத்து 304 பேர் பாதிப்படைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் – பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக இலங்கையில் 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது.

இலங்கையில் ஆறுகள்

(Siraj Mashoor)

இலங்கையில் 103 ஆறுகள் இருக்கின்றனவாம்.
பிரதான ஆறுகள் அனைத்துமே சமகாலத்தில் நிறைந்து வழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடிய காட்சிகளை இம்முறைதான் கண்ணால் கண்டோம்.
பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் ஏக காலத்தில் திறக்கப்பட்டன. மஹாவெலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னரான அணைக்கட்டுகளின் வான் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டது, மலைநாட்டில் பெரும் சவாலாக மாறியது.

Jaffna to Colombo

(Atputha Piratheep)

(முகநூல் பதிவில் இருநது பயணிகள் இதனைச் சரி பார்த்து பயணங்களை மேற்கொள்ளுங்கள்)

யாழில் இருந்து அவசரமாக கொழும்பு செல்ல வேண்டியவர்கள்அநுராதபுரம் குருநாகல் வீதியில் எப்பாவெல சென்று அங்கிருந்து கெக்கிராவ சென்று அங்கிருந்து தம்புள்ளை குருநாகல் வழியாக கொழும்பை அடையலாம்.

பேரிடர் பற்றிய துயரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன…

அவசர தகவல் – கண்டி மாவட்டம் கலஹா / நெல்தோட்டை பிரதேசங்களில் ஏற்பட்ட பேரிடர்
கண்டி மாவட்டத்தின் கலஹா, நெல்தோட்டை, அப்பர் கோனாவை ஆபீஸ், சந்தி, அப்ளையன்ஸ் தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று ஏற்பட்ட கடும் சூறாவளி மற்றும் இடியுடன் கூடிய மழையால் பெரும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.