வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடங்கல்

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயாவின் 06 வான் கதவுகள் திறப்பு

கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு

2026 ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு குராக்கோ முதல்முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் பிரவேசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சாதனையை படைத்தது.

நீலப்பொருளாதாரத்தக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தில்  ப்ளு எக்கோனமிக்  எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.

இலங்கையின் நுகேகொடை அரசியல்

(தோழர் ஜேம்ஸ்)

“மொத்தத்தில் நாமலை ராஜபக்ச வை இளவரசனாக்கி தம்மை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாய்பு ஏற்பட்டால் மீண்டும் அரசு சொகுசுகளை அனுபவிக்க துடிக்க பல பேர் கூடி வடம் இல்லாத தேரை இழுந்தது போல் அமைந்துவிட்டது இந்தக் கூட்டம்”


ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய மக்கள் சக்தி(NPP) அரசுக்கு எதிரான கூட்டம் என்றாக பெயரிட்டு கருக் கொண்டது இன்றைய நுகேகொடை கூட்டம். இதனை ஆரம்பித்தது சிறீலங்கா பொது சன பெரமுன(SLPP) என்ற மொட்டு கட்சி.

MASக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள்

உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

இன்று 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதில் பிரதம நீதியரசர் நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி  அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று முதல் 27ஆம் திகதி வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கடுகன்னாவ மண்சரிவு : பலி எண்ணிக்கை அதிகரித்தது

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

உ/த பரீட்சார்த்தியை பாம்பு தீண்டியது

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் க பொ த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியரின் கண்காணிப்புடன் பரீட்சை எழுதினார். இச் சம்பவம் வியாழக்கிழமை (20) அன்று  இடம்பெற்றது.