இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தல்

பாதுகாப்பற்ற புகையிரத  கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும். இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார் 1,000 கடவைக் காப்பாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் மாதத்திற்கு ரூபா7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250மில்லியனை ஒதுக்கீடு  செய்வதற்கு  நாம்  முன்மொழிகின்றோம்.

இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு

கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு  நாம்  முன்மொழிகிறோம்.

சஜித்துக்கு நன்றி சொன்ன ஜனாதிபதி

மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காக சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை முன்வைத்து, இடையிடையே கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: 1,757 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757  பில்லியன் ரூபாயாகும்.

மொத்த வருமானம்                           5,300   பில்லியன் ரூபாய்

மொத்த செலவினம்                            7,057 பில்லியன் ரூபாய்

 பற்றாக்குறை                                      (1,757) பில்லியன் ரூபாய்


இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: தோட்டத்தொழிலாளருக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1350  ரூபாயில் இருந்து 1750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டள்ளது. அதில், வருகைக்கான கொடுப்பனவு  200 ரூபாய் அரசாங்கத்தால்  2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.  அத்துடன், தோட்ட நிர்வாகத்தால் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆக, 1350+200+200= 1750 ரூபாயாகும். 

கோவை வன்கொடுமை : வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உருவாகி காதலாக மலர்ந்தது. சம்பவத்தன்று இரவு மாணவி, காதலனுடன் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.

பிலிப்பைன்ஸை பேரிடர்: உயிரிழந்தோர் 114 ஆக உயர்வு

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற கால்மேகி புயல் மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியதால், குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒரு பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.

சபிய்யாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

இந்தியாவில் ஜார்காந்த மாநிலத்தின் தலைநகரான ரான்சியில் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் வீராங்கனைகள் தமது நாட்டுக்காக 16 தங்கப் பதக்கங்களையும் 14 வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

கஞ்சா சாகுபடியும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமும்

முழு நாடும் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருளுக்கு எதிரான திட்டம் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்து. போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, இந்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் அறிவித்துள்ளது.