காலாவதியான (காலம்) கஞ்சி .

கொதித்த சுடுநீருக்குள்
தீட்டல் அரிசியை கலந்து
அவியவிட்டு இறக்கினால் கஞ்சி .
பால் மறந்த கஞ்சி.
கஞ்சிக்கு மட்டுமல்ல
பிறந்த குழந்தைக்கும் பாலற்று
சுருங்கிக்கிடந்தன முலைகள்.

ஒரே நாள் சேவையில் பாஸ்போட்

சென்ற வாரம் வவுனியா அலுவலகம் ஊடாக எனது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு ஒரே நாள் சேவையில் பாஸ்போட் எடுத்தேன்.
அதன் அனுபவங்கள்.

காரல் மார்க்ஸ்

(கே.சுப்பராயன் M.P.)

” காரல் மார்க்ஸ் ” வரலாற்று ஏடுகளில் மங்காது ஜொலித்துக் கொண்டிருக்கிற பெயர்.

தோழர். கார்ல் மார்க்ஸ் பிறந்து 205 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!அவர் சிந்திப்பதை நிறுத்தி விடைபெற்றுக்கொண்டு 140 ஆண்டுகள் கடந்துவிட்டன!

இராஜராஜ சோழனும் ஸாஜகானும்

இருவரும் கோயிலை நான்கு முறையேனும் சுற்றி வந்திருப்பார்கள். கால்கள் வலிக்க ஆரம்பித்தன. புல்தரையில் அமர்ந்தனர்.

‘ராஜராஜன் காலத்துலதான் தலித்துகளோட நிலங்களெல்லாம் பறிக்கப்பட்டதுன்னு….அது உண்மையா?’

‘ராஜராஜன் மேல அந்த கம்ப்ளைன்ட் எப்பவும் உள்ளதுதானே? அது ஏற்கனவே வைக்கப்பட்ட விமர்சனம் தானே?’

ஏழ்மையான மக்களுக்கு வழங்குங்கள்

புதிய வரி திருத்தத்துக்கு எதிராக பரவலாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அறிமுகப்படுத்திய வரியை மீளப்பெறவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நமது நாட்டில் பணம்படைத்தவர்கள், ஏழைகள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.

நவீன விவசாயத்திற்கு மாறத் தயங்கும் இலங்கை

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.
அறிமுகம்

விவசாயிகளைப் பந்தாடும் யானைகள்

(க. விஜயரெத்தினம்)

“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால், யானைகள் மிரண்டு ஓடி விடும்” என்று தனது அனுபவத்தில் கண்டு கொண்டதை விவரித்தார் அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபரும் விவசாய ஆர்வலருமான எஸ். தில்லையம்பலம்.

கண்டன அறிக்கை

(Theva Thasan Facebook இல் இருந்து பெறப்பட்டது)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபிசி யின் சிங்களச்சேவையானது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய தகவல்களை ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரில் சிலரது வாக்குமூலங்களுடாக வெளிக்கொணர்ந்தது.

வாழைப்பழ நாடுகள் (பகுதி-1)

(Ravindran Pa)

2021 கணக்கெடுப்பின்படி வாழைப்பழ உற்பத்தியானது,

  1. இந்தியா – 33 மில்லியன் தொன்
  2. சீனா – 11.7 மில்லியன் தொன்
  3. இந்தோனேசியா – 8.7 மில்லியன் தொன்
  4. பிரேசில் – 6.8 மில்லியன் தொன்
  5. எக்குவடோர் – 6.6 மில்லியன் தொன்
  6. பிலிப்பைன் – 5.9 மில்லியன் தொன்
  7. அங்கோலா – 4.3 மில்லியன் தொன்
  8. குவாத்தமாலா – 4.2 மில்லியன் தொன்
  9. தன்சானியா – 3.5 மில்லியன் தொன்
  10. கொஸ்ரா றீக்கா – 2.5 மில்லியன் தொன்
    என்ற கணக்கில் விளைச்சலாகிறது.
    இந்தியாவில் 800’000 ஹெக்ரர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மகாராஸ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேஷ், மற்றும் அசாம் பிரதேசங்களில் இவை பெருமளவில் பயிரிடப்படுகிறது.
    இருந்தபோதும் இந் நாடுகளில் பலவும் உள்நாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக எக்குவடோர் 24 சதவீதமும், கொஸ்ரா றீக்கா 12.9 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 7.8 சதவீதமும், கொலம்பியா 7 சதவீதமும், குவாத்தமாலா 6.5 சதவீதமும் என்ற அடிப்படையில் இருக்கின்றன. 5 பெரும் கம்பனிகள் Dole, Del Monte, Chiquita, Fyffes and Noboa உலக சந்தையின் 80 வீதமான வாழைப்பழ ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன. வாழைப்பழத்தின் அரசியலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.