
(Rathan Chandrasekar)
சோவியத் யூனியன் வீழ்ந்தபோது
பல இடங்களில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. நொறுக்கப்பட்டன.
அப்படி தஜிகிஸ்தானிலும் ஷாரிடஸ் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மாகாணத்தின் மிக உயரமான சிலை வீழ்த்தப்பட்டது.
The Formula
General
(கா.சு.வேலாயுதன்)
“கோவிட் -19 பெருந்தொற்றைக் கேரளம் கையாண்ட விதம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பிரபலத் தத்துவஞானியும் சமூக விமர்சகருமான நோம் சாம்ஸ்கி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோரும் கேரளம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளனர்.
(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது
கடுமையான தொடர்பு – தடமறிதல் (contact-tracing process) செயற்பாடுகள்:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொடர்பு – தடமறிதல் செயல்முறை மூன்று படிகளை உள்ளடக்கியது: வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் 1. நோயாளரை அடையாளம் காணுதல், 2. நோயாளர் பற்றி தகவல்களை திரட்டுதல் மற்றும் 3. நோயாளரைப் பின் தொடர்ந்து அவதானித்தல் ஆகும். கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார வல்லுநர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவம் மற்றும் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி சமூகத்திலிருந்து விரைவாக இனம் கண்டு தனிமைப்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி கண்டது.

(வடகோவை வரதராஜன்)
முன்னைய தொடர்ச்சி
நான் முன்பு கூறிய மாதிரி ;
நாம் நடும் மரங்கள் மனிதனுக்கு , விலங்குகளுக்கு பறவைகளுக்கு , தேனீக்களுக்கு பயன்படுவையாக இருக்கவேண்டும் . ஒரு மண்ணுக்கு சம்மந்தம் இல்லாத மரத்தை நாம் நடும் போது அது வளராது அல்லது வீரிய வளர்ச்சியைக் காட்டாது . உங்கள் சூழலில் இயற்கையாக என்ன மரங்கள் வளர்ந்திருக்கின்றன என அவதானியுங்கள் . அவற்றை நடுகை செய்யுங்கள்

நேற்றைக் கிரவு…, நீள்துயிலுக்
கிடையினிலே
ஏற்றம் இறைப்பதுபோல் ஓர்கனவு;
ஏற்றமதில்,
ஏறி மிதித்ததுநான்; இறைத்தவனோ இன்னொருவன்
சாறிக் கிடந்தஅந்த செம்பாட்டுத் தரைமேலே
ஆறிஆறி ஓடியது ஊற்றியநீர்;
ஏறியநான்
எட்டி முன்வந்து உழக்கநீர் மொள்ளுவதும்
விட்டுப் பின்செல்ல வெளிக்கிழம்பிப் பட்டையது
திட்டைக்கு ஏறித் தண்ணீர் சொரிவதுமாய்…
பட்டுப் பட்டென்று பகல்போலக் காட்சிதர,
எட்டிக் கீழ்நின்று இறைப்பவனை நோக்குகிறேன்..
எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
ஏற்றமுறு செங்கையாழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !
(“ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!” தொடர்ந்து வாசிக்க…)
மனைவியை
தாயாக
நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்….!
கணவனை
பிள்ளையாக
நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்…!
இருக்கும் வரை
உண்மை
காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!
– குடாநாட்டான் –