ரணிலின் வழக்கு: மக்களை திரட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணையுடன் இணைந்து,  பெருந்திரளான ஆதரவாளர்களை, கொழும்பில் நாளைக்கு (26)  ஒன்று திரட்டும் திட்டத்தை எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் இளைஞர் அணிகள் அறிவித்துள்ளன.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடந்த சில காலமாகவே ரஷ்யா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மாதத்தில் நான்காவது முறையாக ரஷ்யாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

”சலுகைக் குறைப்பு சட்டமூலத்தில் ஓய்வூதியம் நீக்கப்படாது”

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் சட்டமூலம், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயற்சிக்கவில்லை, மாறாக 1986 ஆம் ஆண்டு 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகைகளைக் குறைப்பதாகும் என்று சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

’’அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் நகர்கிறது” – முன்னாள் அமைச்சர்

எதிர்க்கட்சிகளை அடக்கி நாட்டை ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று குற்றம் சாட்டினார்.

ரணிலை கொல்ல சதி: CID இல் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் சமூக ஊடக செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) புகார் வந்துள்ளது.

ரணில் கைது: இந்திய எம்.பி கடும் அறிவுறுத்தல்

“பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்”என இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படத் தொடங்கிவிட்டது  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரணில் கைது;சந்திரிகா கவலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார், இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

நோர்வூட் முன்னாள் தவிசாளர் இந்நாள் தவிசாளருக்கு அச்சுறுத்தல்

நோர்வூட்  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை மிரட்டியதாக நோர்வூட்  பிரதேச சபையின் தவிசாளர் ஜோன் பிரான்சிஸ் எலன் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

GMOA நாளை வேலைநிறுத்தம்

மருத்துவ இடமாற்ற செயல்முறை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை திங்கட்கிழமை(25) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது . எனினும், அத்தியாவசிய நடவடிக்கைகளில் இருந்து விலகமாட்டார்கள் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.