பிள்ளையானுக்காக கொலைகளை நடாத்திய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான  முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள் ரத்து

கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலு கொண்டது. இந்த புயலுக்கு ‘போடூல்’ என தைவான் பெயரிட்ட நிலையில் அந்த தீவின் தென்கிழக்கு கரையோரம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. நேற்று போடூல் புயல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் கரையை கடந்தது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 123 பேர் பலி

காஸா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 24 மணித்தியாலங்களில் 123 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வாரமொன்றில் கொல்லப்பட்டவர்களின் கூடிய எண்ணிக்கை இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

‘ராஜபக்‌ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

குளத்துடன் கோபித்துக்கொண்டு கழுவாவிட்டால் நாறும்

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை கண்டித்தும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், ஓகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தால், திங்கட்கிழமைக்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அரசியல் என்பது ஓர் இலாபகரமான தொழில் அல்ல

மக்கள் இறையாண்மை என்பது குடிமகன் தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் முடிவுகளை எடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.ஒரு தேர்தலில் வாக்களித்த பிறகு நாட்டின் குடிமகன் அல்லது வாக்காளரின் பங்கு முடிவடைவதில்லை. 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை  (14) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்யப்பட்டுள்ளார்.

4 தசாப்தங்களுக்குப் பின் புனரமைக்கப்படும் பாராளுமன்றம்

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இலங்கை பாராளுமன்றத்தில் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 42 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, இலங்கை பாராளுமன்ற வளாகத்தின் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நாட்டின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது”

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.