மஹிந்தவை சந்தித்தார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.  கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது ராஜபக்ச அளித்த ஆதரவுக்கு விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, ராஜபக்ச தனிப்பட்ட பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​விக்கிரமசிங்க அவரைச் சந்தித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காவது நாள் இன்று

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் ஸ்ரீதரன் பங்கேற்புடன் இடம்​பெற்றது.

மன்னாரில் பொது முடக்கத்திற்கு அழைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் திங்கட்கிழமை (29) அன்று மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம்  போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக தண்டிப்பு சட்டமூலம் -பிரதமர் விளக்கம்

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தண்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டம் பாடசாலைகளையோ அல்லது ஆசிரியர்களையோ இலக்காகக் கொண்டதல்ல, மாறாக சமூகம் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

ஐ.நாவில் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.

அனைத்து வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு

2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் போராட்டத்தில் நள்ளிரவில் பதற்றம்: பலர் காயம்

மன்னாரில் நேற்று (26) இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.

டிரம்பை உட்பட உலகத் தலைவர்களைச் சந்தித்தார் அனுர

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து சட்டங்களை மீறிய பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

அம்பாறை – சம்மாந்துறையில் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.