’பேராறு’ குளத்தின் வான் கதவு திறப்பு:பறங்கி ஆறு பெருக்கெடுக்கும் அபாயம்

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘பேராறு’ குளத்தின் வான் கதவு ஒன்று புதன்கிழமை (26)  திறக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வான் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்திய வானிலை ஆய்வு​ மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கடற்கரையில் உருவாகி வந்த வானிலை அமைப்பு வியாழக்கிழமை (27) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இலங்கை: மழை வெள்ள அனர்த்த செய்திகள்

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “டிட்வா” என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. “டிட்வா” என்ற பெயர் ஏமன் பரிந்துரைத்தது மற்றும் அதன் தனித்துவமான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயர் பெற்ற சோகோட்ரா தீவில் உள்ள டெட்வா லகூனைக் குறிக்கிறது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் UN ESCAP வெப்பமண்டல சூறாவளிகளுக்கான குழுவால் பராமரிக்கப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலைப் பின்பற்றுகிறது, இது உறுப்பு நாடுகளின் பங்களிப்புகளைப் பயன்படுத்துகிறது. “டிட்வா” என்பது இந்த பகிரப்பட்ட அமைப்பிற்குள் ஏமனின் கடற்கரை மற்றும் கடல் பாரம்பரியத்தை குறிக்கிறது

பல பிரதேசங்களில் மின் தடை

மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

வைத்தியசாலையில் மஹிந்த அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) காலை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்பின் வழியது உயிர் நிலை….

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை அரசியலை மேல் எழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு யார் இவர்கள் … யார் இவர்… என்று கேட்கத் தோன்றும். ஆனால் அரசியலை ஆழமாக பார்பவர்களுக்கு இவர்கள்.. இவர்… மிக முக்கியமானவர்களாகவே தோன்றுவர் தற்போதைய அரசியல் சூழலில்.

ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா சந்திப்பு

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!

கடந்த 24-11-2025 செவ்வாய் கிழமை ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் “புலம் பெயர் இலங்கைத் தமிழர்” அமைப்பின் சார்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலின் சாராம்சத்தினை அதன் முக்கியத்துவம் கருதி பதிவு செய்கிறேன்.

அபேகுணவர்தன உட்பட 20 பேர் மீண்டும் பல்டி

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (25) ‘லங்காதீப’த்திடம் கூறுகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹோட்டுவ) 20க்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் அடுத்த ஜனவரி மாதம் மீண்டும் கட்சியில் இணைவார்கள்.

அஸ்வெசும பயனாளிகளை சரியாக தெளிவுப்படுத்தவும்

இலங்கையில் இலவச சமுர்த்தி, முதியோர் உதவி, சிறுநீரக நோய்த் திட்டம், ஊனமுற்றோர் உதவித் திட்டம் மற்றும் பொது உதவி என்பன தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன்,  அஸ்வெசும திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. 

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஆரம்பிக்கப்பட்டது.