ஜீப் மோதி வெளிநாட்டவர் மரணம்

வெலிகம கடற்கரையில் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 42 வயதுடைய வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ஜீப் வாகனம், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கிலோ தங்கம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர். தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின்போதே, இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நவகமுவ துப்பாக்கிச்சூடு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

நவகமுவ, கொரதொட்ட , மெனிக்காரா பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் கைது – ட்ரம்ப்

அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவித்துள்ளார், வெனிசுலா அரசு இதை “ராணுவ ஆக்கிரமிப்பு” என்று கூறி அவசர நிலையை அறிவித்துள்ளது, இது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், ஆனால் வெனிசுலா இதனை ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி என்று குற்றம் சாட்டுகிறது. 

80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 92 நபர்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது

தமிழக மீனவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

200 பேருடன் மூழ்கிய படகு: டஜன் கணக்கானவர்கள் மாயம்

ஐரோப்பாவை அடைய முயன்ற சுமார் 200 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு காம்பியா கடற்கரையில் கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாகதீப விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள்   தையிட்டி விகாரை பகுதிக்கு வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

’’குஷ்’’ஷூடன் இந்திய பிர​ஜை கைது

“குஷ்” போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை (02) அன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார். அந்த பெறுமதி ரூ. 34 மில்லியன் 19 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிட்வா நிவாரணத்துக்கு விளையாட இந்தியா இணக்கம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக , ​​மேலதிகமாக இருபதுக்கு 20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.