2026 FIFA: உலகக் கோப்பையின் எட்டாம் நாள் அதிரடி

பிஃபா 2026 உலகக்கோப்பைத் தொடரின் எட்டாம் நாள் (ஜூன் 18), கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, தொடரை நடத்தும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.

அர்ச்சுனாவின் உருவப்படத்திற்கு காலணி மாலை

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உருவப்படத்திற்கு காலணி மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது

ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையே கைச்சாத்தாகி, உடனடிப் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் பெரிதும் வரவேற்கிறது.

மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், உப அதிபர், மாணவன் கைது

அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

இன்று ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன்.

கோட்டாபயவின் முக்கிய புள்ளி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களை இலக்கு வைத்த மதனமோதகம் மீட்பு

பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,74,200 ரூபாய் மதிப்புடைய 1,214 மதனமோதக (குலி) மாத்திரைகளை, புதன்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன அழிப்பின் நினைவகம் செம்மணி: நல்லூரில் தீர்மானம்

செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக (Memorial) மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.