யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.



