ஒரே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அறுபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய ஒருவரை உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே காண்பது அரிது. அந்தச் சாதனைக்குரியவர் இலங்கையின் பாலா தம்பு. 1948-ஆம் ஆண்டு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014-ஆம் ஆண்டு தனது 92-ஆவது வயதில் மறையும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.







