ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் மேலதிக நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவற்றை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில்இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பொதுமக்கள் அவதி!…..
மட்டக்களப்பு சிறையில் பதற்றம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில், இளைஞர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் உணவகம் மீது சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகளில் மாற்றம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் மாநாடு
’’நாமல் புலம்புவது நியாயமே’’
உயிரிழந்த அதிகாரிகளின் சடலங்கள் கொழும்புக்கு வருகிறது
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக பொரளை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்வேலியில் சிக்கி 62 வயது நபர் உயிரிழப்பு
’’இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை’’ மஹிந்த ராஜபக்ஷ
“இவர்கள் செய்வது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இது அவர்கள் வழமையாகச் செய்யும் ஒன்றுதான்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்கட்சி அரசியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
