தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பொருட்களின் விலையேற்றம் காரணமாக வியாபாரம் இம்முறை மந்தகதியில் காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


