தீயையடுத்து துறைமுகம் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட்டானது தற்காலிகமாக துறைமுகத்துக்குச் செல்லுமென ஐ. அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளனர்.

மொசாட்டிடம் $1 மில்லியன் எதிர்பார்த்த ஜே.ஆர்

இலங்கையில் 1980 நடுப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜேர்.ஆர் ஜெயவர்தன தனது தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் பிரதிநிதிகளிடம் கோரியதாக இராஜந்திர கேபிளொன்று வெளிப்படுத்தியதாக தவையர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதி அளிக்கப்பட்டதா என இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சு அண்மையில் வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.

பாராளுமன்றமும் நாளை கூடாது

புதன்கிழமைகளை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், நாளை (18) பாராளுமன்றத்தை  கூட்டப்போவதில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற நாட்காட்டியின்படி புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட  தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில்  பொது சேவைகளுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும் என அரசாங்கம் ​திங்கட்கிழமை (16)  அறிவித்தது. 

கறுப்புக் கொடி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் மூவருக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ட்ரம்ப் மீது பாய்ந்தது அமெரிக்க உளவுத்துறை

ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி சி சின்பிங்குடன் மேற்கொள்ளவிருந்த முக்கியச் சந்திப்பைச் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். ஈரானுடன் போர் நடந்து வரும் சூழலில், உள்நாட்டிலிருந்தே போர் உத்திகளை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

புதன்கிழமைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு

அரசாங்கத்தால் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் பாடசாலை

உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.

யாழில் சோகம்: அண்ணன், தங்கை உயிரிழப்பு

வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அண்ணனும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாருக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.