போர் பதற்றத்தில் புதிய திருப்பம்

ஈரானை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11)  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள், பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

ஈரான் கப்பல் தகர்ப்பு ; உடல்களை கொண்டு செல்ல நடவடிக்கை

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ‘ஐரிஸ் டேனா’ (Iris Dana) ஈரான் போர்க்கப்பலில் இருந்த கடற்படை வீரர்களின் உடல்களை விரைவாக ஈரான் நாட்டுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

’ஈரானிய மக்களால்தான் ஆட்சி மாற்றம் சாத்தியம்’ – பெஞ்சமின் நெதன்யாகு

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெதுப்பக (Bakery) மற்றும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல உணவக மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதைய சூழலில் விலைகளை அதிகரிக்காமல் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புகலிடம் பெற்ற பின் மனம் மாறிய ஈரான் கால்பந்தாட்ட அணி அங்கத்தவர்

அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட ஈரானிய கால்பந்தாட்ட குழுவின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் அவரது மனதை மாற்றியதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் பணம் மோசடி ; கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (11) அன்று காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

04 யோசனைகளை முன்வைத்தார் சஜித்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் நேரடித் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  புதன்கிழமை (11) அன்று கொழும்பில் விசேட கலந்தாய்வொன்றை நடத்தினார்.

மாத்தளை வடிவேலனின் இறுதிக்கிரியைகள் நாளை

மாத்தளையின் ஆன்மீகச் செழுமையில் ஊட்டம் பெற்றவரும், மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரமுமான மாத்தளை வடிவேலன் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மாத்தளை மந்தண்டாவலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

எலிக்காய்ச்சல் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.