வவுனியா மற்றும் ஓமந்தை இடையே ரயில் பாதையில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் யாழ்தேவி ரயில் தாமதமாகும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Month: October 2025
“SVAT-ஐ இரத்து செய்ய வேண்டாம்”
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (SVAT) திட்டம் நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையைக் கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்குச் செல்லவேண்டும்.
மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது
மகாண சபைகளை இயங்கு நிலைக்கு கொண்டு வரவேண்டும்
கரூர் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்காளர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
ஐ. அமெரிக்க அரசாங்கம் முடக்கம்
ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளது. செலவுக்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றும் செனட் உறுப்பினர்களின் இறுதி நேர முயற்சிகள் தோல்வியடைந்தமையையடுத்தே இம்முடக்கம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்கான முன்மொழிவுகளை ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் நிராகரித்திருந்தனர்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் பலி
அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு,விசா சேவைகள் தொடரும்
வருகிறது சிலிசிலி வரி
பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (01) அறிவித்துள்ளது.

