(Mukinthan Thurairajasingham)
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை என்பது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையம் என்று நாம் கருதுகிறோம்.

The Formula
இந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய திட்டம் ஒன்று உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் கடந்த வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.