திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது, இன்னும் சில தமிழ் பாடசாலைகள் தனது இறுதி மூச்சில்!

இன்று எமது மண்ணின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்றான புனித வளனார் என்ற பாடசாலை முற்றிலுமாக மூடப்பட்டு இருக்கிறது, போதியளவு மாணவர்கள் இல்லாத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

டலாக் குடி மகனின் அனுபவம்

டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இளம் சுற்றுலாப் பயணி ஒருவர்,
தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறைக்காக லடாக் வந்திருந்தார்.

அங்கு அவருக்குக் கிடைத்த டிரைவர் சுமார் 28 வயதுடைய இளைஞர்.
அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.

’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்

அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.

பாட்ஷா கான்

உலகிற்கு பாட்ஷா கான் என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும், எல்லைப்புற காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலை

(Manoraj Rajmohan)


27/03/2025 அன்று மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையின் பதில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட வேளையில், குறித்த நிறுவனம் நிர்வாக, கட்டமைப்பு மற்றும் வள மேலாண்மை சார்ந்த சவால்களின் தாக்கத்தில் காணப்பட்டது.

வடக்கில் பெரும் ஆபத்து விரைவாக பகிருங்கள்

சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சியில் எனக்கு தெரிந்த இளம் குடும்பத்தினர் மரணித்திருந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை வினவிய போது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது ஆதாவது அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதன் காரணமாக அவர் மரணித்ததாக.

கால்நடை கட்டுப்பாட்டு விதிமுறைகள் – ஒரு கட்டுரை


(தனபாலசிங்கம் துளசிராம்  ( கைதையூரான் ))

2011 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் பாகம் VIII (பொதுவான ஏற்பாடுகள்) – உட்பிரிவு 92 இன் பிரகாரம், பயிற்செய்கை நிலங்களில் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான தெளிவான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

4.6.1 யாழ்ப்பாண நதித் திட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றும் அதன் தவறான பொருளாக்கம் (Part 1)

யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கான தீர்வாக “A River for Jaffna” என்ற திட்டத்தை மீளத் திறப்பது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்கல் அல்ல; மாறாக, தீபகற்பத்தின் நில உற்பத்தித் திறனை உயர்த்துவதே ஆகும்.1940களில் புகழ்பெற்ற பொறியாளர் இ. சு. ஆறுமுகம் அவர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.