500 லீற்றர் எரிபொருளை சேமித்தவர் சிக்கினார்

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ். மாணவர்கள் இன்று மாபெரும் கவனயீர்ப்பு

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை (19) விரிவுரைகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழ மாணவி உலக முடிவில் விழுந்துவிட்டார்

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

கால வரம்பு மீறினால் இலவசம்; கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்

ஒட்டாவா, ஒன்டாரியோ – கனடாவின் கூட்டாட்சி அரசு புதிய சேவை தரநிலையை அறிவித்துள்ளது.  இதன் படி, 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அது இலவசமாக வழங்கப்படும்.

கனேடிய மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25% என்ற அளவிலேயே தக்கவைத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.

இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா ஜே.ஆர்? அம்பலமாகும் இரகசிய ஆவணங்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’  இடமிருந்து 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாகக் கோரினார் என்ற அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

“விவசாய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும்”

அம்பாறை மாவட்டம் பரந்தளவிலான விவசாய நிலங்களை கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக திகழ்வதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா புதன்கிழமை (18) அன்று தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு: களத்தில் குதித்தது ஜனாதிபதி செயலகம்

முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கையையடுத்து, இது குறித்த விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.

தீயையடுத்து துறைமுகம் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட்டானது தற்காலிகமாக துறைமுகத்துக்குச் செல்லுமென ஐ. அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளனர்.

மொசாட்டிடம் $1 மில்லியன் எதிர்பார்த்த ஜே.ஆர்

இலங்கையில் 1980 நடுப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜேர்.ஆர் ஜெயவர்தன தனது தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் பிரதிநிதிகளிடம் கோரியதாக இராஜந்திர கேபிளொன்று வெளிப்படுத்தியதாக தவையர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதி அளிக்கப்பட்டதா என இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சு அண்மையில் வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.